- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
க்ருஷ்ணாவதார முகத்தாலும் ராமாவதார முகத்தாலும் மண்ணில் பாரங்களை நீக்கியருளின மஹாநுபாவனுக்கன்றி மற்றொருவன் விஷயத்திலே என்னெஞ்சு தாழாது என்கிறார். * மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தவன் சிலைவளையத் திண் தேர்மேல் முன்னின்று அருள் செய்தமையை முன்னடிகளிற் கூறுகின்றார். ‘சரங்களாண்ட’ என்றது “வில்லாண்டான்றன்னை” என்றாற்போலே; சத்துருக்களைக் காட்டு, காட்டு’ என்று விம்மிக் கிளம்புகின்ற அம்புகளை அடக்கி யாள்பவ னென்க “சரங்களாண்ட தண்டாமரைக் கண்ணன்” என்ற சேர்க்கையினால் – தாமரைக் கண்களின் கடாக்ஷத்திற்கு இலக்காகி உய்நததுபோகப் பெறாதே அம்புகட்கு இலக்காகி மாண்டுபோயினரே பாவிகள்! என்ற பரிதாபந்தோன்றும். இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயததிலே “ந நமேயம் – தாழமாட்டேன்” என்று மார்பு நெறித்து மாண்டொழிந்தனர் ஆஸுர ப்ரக்ருதிகள்; என் மனம் அங்ஙனன்றியே தாழ்ந்து நின்று உய்வுபெறும் என்றாராயிற்று.
English Translation
In the Bharata war between mighty kings, See, the Pandavas won by me Krishna who steered the chariot killing mighty warriors, -He resides amid bee-humming nectared groves. He's the Lord of sweet Arangam and my heart, He's the Lord of gods, Lotus-like eyes and lips. He's the Lord who rained arrows on Lanka king. He alone commands me and my worship.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்