- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
துன்று ஒளித் துகில் படலம்* துன்னி எங்கும் மாளிகைமேல்*
நின்று ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
மன்று ஆரக் குடம் ஆடி* வரை எடுத்து மழை தடுத்த*
குன்று ஆரும் திரள் தோளன்* குரை கழலே அடை நெஞ்சே!
காணொளி
பதவுரை
துன்று – நெருங்கியும்
ஒளி – ஒழுங்குபெற்று மிருக்கிற
துகில் படலம் – த்வஜபடங்களின் திரள்கள்
மாளிகை மேல் – மாளிகைகளின் மேல்
எங்கும் துன்னி - எல்லாவிடங்களிலும் நிபிடமாய்
விளக்க உரை
திருமாளிகைகளில் த்வஜபடங்கள் கட்டியிருப்பதாக வருணித்தல் செல்வமிகுதியை விளக்குமென்க. குரைகழல் இரட்டுற மொழிதலாகக்கொண்டு குரைகழலையுடைய கழல்என்க கழல் – காலிலணியும் ஆபரணத்துக்கும் காலுக்கும் பெயர். குரைகழல் – வினைத்தொகைப் யுறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.
English Translation
O Heart! Rows of cloth flutter on mansions everywhere density, hiding the sky in wealthy Tirunaraiyur. The Lord danced with pots and lifted a mountain to stop the rains with his mighty shoulders. Attain his resounding feet.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்