- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மான் கொண்ட தோல்* மார்வின் மாணி ஆய்* மாவலி மண்
தான் கொண்டு* தாளால் அளந்த பெருமானை*
தேன் கொண்ட சாரல்* திருவேங்கடத்தானை*
நான் சென்று நாடி* நறையூரில் கண்டேனே. (2)
காணொளி
பதவுரை
மான் கொண்ட தோல் மார்வில் மாணி ஆய் – கிருஷ்ணாஜினத்தை மார்பிலே தரித்த பிரமசாரியாகி
மாவலி – மஹாபலி பக்கலில்
மண்தான் கொண்டு – பூமியைத் தான் யாசித்துப்பெற்று
தாளால் அளந்த – திருவடிகளாலே ஆக்ரமித்துக் கொண்ட
பெருமானை – பெருமை பொருந்தியவனும்
விளக்க உரை
நான் சென்று நாடி = எம்பெருமான் என்னைப் பெறுதற்குப் பல அவதாரங்களெடுத்துத் தேடித்திரிந்தான்; அக்காலங்களிலே நான் விமுகனாயிருந்திட்டேன்; இன்று நான் அவனைத் தேடித்திரிய வேண்டிற்று; அறுகாதப் பயணம்போய்த் திருமலையுச்சியிலே காணவேண்டாமல், விடாய்த்த விடத்திலே தண்ணீர் குடிக்கப் பெறுமாபோலே திருநறையூரிலே காணப்பெற்றேன் என்கிறார்.
English Translation
The Lord wore a deerskin on his chest and went to Mabali as a manikin seeking a gift of land, then took the whole Earth. He is the resident of nectar-groved Tiruvenkatam, searching for him everywhere I have found him in Naraiyur.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்