- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தன்னுருவம் தன்னாலே பயந்த தானாய் எம்பெருமான் தவிர மற்றையோருடைய ஸ்வரூபமெல்லாம் எம்பெருமானுயை இச்சைக்கு உட்பட்டதாயிருப்பதுபோல, எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்வபாவங்கள் வேறொருவருடைய இச்சைக்கு உட்பட்டதாயிருக்குமோ வென்னில், இரா; தன்னுடைய ஸ்வரூபஸ்திதி முதலியவை தானிட்ட வழக்காம்படியிருக்கும் அவனென்னவுமாம்; அகர்மவச்யன் என்றவாறு. “தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்” என்றதனால் நித்யவிபூதியைத் தானிட்ட வழக்காகவுடையன் என்பதும், ‘வானாய்‘ என்றதனால் நித்யவிபூதியைத் தானிட்ட வழக்காகவுடையன் என்பதும் சொல்லிற்றாம். தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தன்னுடைய ஸங்கல்பத்தாலேயே ஸ்வரூபத்தை மூன்று வகுப்பாக வகுத்துக்கொண்டவன்; தானான நிலைமையிலே நின்று ஸம்ரக்ஷித்தும் ப்ரஹ்மருத்ரர்களுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டிஸம்ஹாரங்களை நடத்தியும் ஆகவிப்படி மூன்று வடிவுகளை யுடையவனென்றபடி.
English Translation
Devotees! The Lord who is self-made, who made the three radiant worlds, who is the Lord of Valikunta, who himself became the Tri-murti, then also became a cowherd, resides in Tirunarayiur Manimadam, where the spear-wielding chola king Kongan offers worship. Attain him there.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்