விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்*  மதனன் என்றார்தம்மைக்* 
    கேள்மின்கள் ஈளையோடு*  ஏங்கு கிழவன் என்னாதமுன்*
    வேள்வும் விழவும்*  வீதியில் என்றும் அறாத ஊர்* 
    நாளும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

இரண்டாமடியின் முதலில் “கேண்மின்கள்” என்றே எங்கும் பாடம் வழங்கிவருகின்றது; ‘கேளுங்கள், என்ற பாடமு வியாக்யானத்திற் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு இரண்டு வகையான பொருளுமருளிச்செய்யப்பட்டுள்ளது; ‘கேளுங்கள்’ என்று முழுச்சொல்லாய் வினைமுற்றாகக்கொண்டு பொருள்பணித்தல் ஒருவகை. ‘கேள் உங்கள்’ என்று பிரித்து, (ஈளையோடு எங்குகிழவன் உங்கள் கேள் என்னாதமுன்) கோழையோடு கூட இருமித்தளர்கின்ற இக்கிழவன் உங்கள் உறவு என்று அந்தவீட்டுப் பெண்களை நோக்கி இந்த வீட்டுப்பெண்கள் சொல்லுவது, இந்த வீட்டுப்பெண்களை நோக்கி அந்த வீட்டுப்பெண்கள் சொல்லுவதாய் இப்படி ஒருவர்க்கொருவர் பரிஹஸிக்கும்படியான நிலைமை நேருவதற்கு முன்னே எனப் பொருள் பணிப்பது மற்றொருவகை. திருநறையூரில், ஸந்நிதியில் உத்ஸவகோஷங்களும் திருமாளிகையில் யஜ்ஞகோஷங்களும் மலிந்திருக்கு மென்கிறது மூன்றாமடி.

English Translation

O Heart! Before dagger-sharp-eyed-dames who once tondly called you Madana, begin to say, "Ask this coughing man what he came here for", let us go to the Lord surrounded by endless festivities and sacrifices all the year round, -He resides in Naraiyur, -and offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்