- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
சிற்றின்பங்களை நான் துறப்பேனேயன்றி, தேவரீருடைய அநுபவமாகிற பேரின்பத்தை ஒருநாளும் இழக்கமாட்டேன்; தேவரீருடைய வடிவழகு என்னால் மறக்கமுடியுமாகிலன்றோ இன்பத்தை நான் துறந்தவனாவேன்; வடிவழகை மறவாதவனாகையாலே இனபத்தைத் துறவாதவனாயினேன்; இப்படிப்பட்ட நான் இனிமேலும் இவ்விருள் தருமாஞாலத்தில் பிறந்து பிறந்து கஷ்டங்கள்பட நினைப்பேனோ? “மறந்தேனுன்னைமுன்னம்” என்று கீழ்நாட்களில் தேவரீரை மறந்திருந்தேனாகிலும் இனிமேலுள்ள காலம் மறவாதேயிருக்கப் பாரித்திருப்பவனாதலால் அடியேன் பிறவித்துயர்நீக்கி நித்யானந்த மநுபவிக்கவே உரியேனாயினேன் என்றாராயிற்று. கீழ்த்திருமொழியில் “மறந்தேனுன்னை முன்னம் – அதனாலிடும்பைக்குழியிற் பிறந்தே யெய்த்தொழிந்தேன்” என்று மறதிக்குப் பலனாகப் பிறவித்துன்பம் பெற்றமை சொன்னார்; இதில் மறவாமைக்குப் பிறவாமைபெற்றமை சொன்னாரென்க.
English Translation
O Lord of Tiruvinnagar! I have renounced all pleasures, always remembering your beautiful form. No more shall I be born on Earth. Freed of birth I have come to you, by your grace.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்