- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இப்பாசுரத்தில் இரண்டாமடியில் நெடுநாளாகவே ஒரு பாடப்பிழை நேர்ந்துள்ளது; “மேவா வெந்நரகத்து இடருற்று என்றே பலரும் ஓதுவர்; இப்பாடம் பொருளற்றது; “இடவுற்று என்பது “இடருற்று“ எனப் பிழைபட்டது. (அடியேனை) மேவா வெம் நரகத்துஇட (நரகத்திலே தள்ள) உற்று விரைந்து வந்தார் என்கை. கீழ்ப்பாட்டில் “ஆறாவெந்நரகத்தடியேனை இடக்கருதி“ என்றாப்போலே. கீழ்ப்பாட்டில் ஐவர் (பஞ்சேந்த்ரியங்கள்) எழுவாய்; இப்பாட்டில் வல்வினையார் (பாபராசிகள்) எழுவாய். வல் என்ற அடைமொழி – அப்பாவங்கள் அவசியம் அநுபவித்தேதீரவேண்டுமவை என்பதைக் காட்டும். தீவாய் என்னும் அடைமொழி அவற்றின் கொடுமையைக் காட்டும். பலவகைத் துன்பங்கள் யுண்டுபண்ணுகின்றன வென்றபடி. சிறந்தவர் என்றது – உடன்பிறந்தோர் மக்கள் மனைவியர் முதலான உறவினரைச் சொன்னபடி. அவர்கள் ஒருகாலும் விட்டு நீங்காதவாறுபோல் இக்கொடிய பாவங்களும் எப்போதும் விட்டுப்பிரியாமலிருந்து கொண்டு என்னை நரகத்திலே தள்ளப்பார்க்கின்றனவென்றாராயிற்று
English Translation
O Lord residing in Tiruvinnagar! Pretending to be excellent friends, my wicked karmas only wall to send me to terrible hell. O, the first-cause Lord of gods, the three-gods-one! You rid the moon of his misery! I have come to your feet.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்