விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்*  பல்லாண்டு இசைப்ப* 
    ஆண்டார் வையம் எல்லாம்*  அரசு ஆகி*  முன் ஆண்டவரே-
    மாண்டார் என்று வந்தார்*  அந்தோ! மனைவாழ்க்கை-தன்னை* 
    வேண்டேன் நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாண் - இசைப்பாட்டையுடையனவாய்
தேன் - தேனைப் பருகுகின்ற
வண்டு - வண்டுகள்
அறையும் - ரீங்காரம் செய்யப்பெற்ற
குழலார்கள் - கூந்தலையுடையரான மாதர்கள்

விளக்க உரை

ப்ராக்ருதமான செல்வம் நிலைநிற்கமாட்டாதாகையாலும், கைங்கர்யமாகிற அப்ராக்ருத செல்வமே நிலைநிற்பதாகையாலும் இம்மைச் செல்வத்தை வெறுத்து மறுமைச்செல்வத்தை விரும்பி உன்னடி பணிந்தேனென்கிறார். “கண்டார்வணங்கக் களியானைமீதே கடல் சூழுலகுக்கொரு காவலராய் விண்டோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரிநீருலகாண்ட” என்றாப்போல நிலமுழுது மாளுமரசர்களைச் சுற்றி வண்டார் பூங்குழல்மாதர் பலரிருந்து ‘இச்செல்வம் மாறாதே நிலை நிற்கவேணும்’ என்று பல்லாண்டுபாடுவார்களாம், அதனைச் சொல்லுகிறது முதலடி.

English Translation

O Lord residing in Tiruvinnagar! With fragrant bee-humming nectar-coiffured dames singing their glory, they who had ruled the Earth once are now dead and gone. Alas! I have no desire for worldly life anymore. I have come to your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்