விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட*  தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் 
    விழ*  நனி மலை சிலை வளைவு செய்து*  அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குழல் நிறம் வண்ண - திருக்குழலின் நிறம் போன்று நீலமான நிறத்தையுடையவனே!,
நின் கூறு கொண்ட - உனது திருமேனியிலே ஒரு பகுதியை இடமாகவுடையவனும்
தழல் நிறம் வண்ணம் - நெருப்பின் நிறம் போன்ற நிறமுடையனுமான ருத்ரனால்
நண்ணார் நகரம் விழ - பகைவரான அசுரர்களின் முப்புரம் முடியும்படியாக
நனி மலை - மிகப் பெரிதான மேருமலை போன்ற

விளக்க உரை

குழல் நிறவண்ண – கரிய திருமேனியுடையாய்! என்றபடி. நின்கூறு கொண்ட தழல்நிற வண்ணன் = எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்தைப்பற்றி பேசும்போது தாமஸ தெய்வமான ருத்ரனுக்கும் தனது திருமேனியின் வலப்பக்கத்தில் இடங்கொடுத்து ஆதரிக்குமவனென்று ஆழ்வார்கள் ஈடுபட்டருளிச்செய்வது வழக்கம்; திருவாய்மொழியில் “வலத்தனன் திரிபுரமெரித்தவன்” 1-3-9 என்ற பாசுரத்தின் வியாக்கியானத்தில் “பச்சையகாதசமே ருத்ராந் தக்ஷிணம் பார்ச்வ மாச்ரிதாந்” என்ற மோக்ஷதர்ம வசநத்தை எடுத்துக்காட்டியிருப்பது இங்கே அநுஸந்தேயம்.

English Translation

Dark as the dark hair with portion on frame given to the fiery red glowing Siva, -aiming his hot arrows over the three-city, burning the Eastern to ashes in yore! O Lord! If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்