- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி* உலகு எலாம் திரியும் ஈசன்*
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன* ஒண் புனலை ஈந்தான்*
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த* செறி வயல் தென் திருப்பேர்*
வானவர்தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே.
காணொளி
பதவுரை
ஊன் அமர் தலை ஒன்று - மாம்ஸம் நிறைந்ததொரு பிரமகபாலத்தை
ஏந்தி - கையில் தரித்துக்கொண்டு
உலகு எல்லாம் - எல்லாலோகங்களிலும்
திரியும - (பிச்சையெடுத்துத்) திரிந்துகொண்டிருந்த
ஈசன் - ருத்ரனானவன்
விளக்க உரை
ஈனமர்சாபம் - கண்டவர்களடங்கலும் ‘இவன் பிரமஹத்திக்காரன்’ என்று பழிக்கு படியாகவுள்ள பாவம் என்றவாறு. ‘ஹீநம்’ என்ற வடசொல் ‘ஈன்’ எனச்சிதைந்தது.
English Translation
The god Siva, with a skull for a begging bowl, came seeking redemption. The Lord filled his skull-bowl with sap of his heart and freed him from the curse. He resides amid nectared! graves and fertile fields in Ten, Tirupper, How easily have I attained him through chanting his names!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்