- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து* இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரிசிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட மலையால்*
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
காணொளி
பதவுரை
கொடுமையில் கடுவிசை அரக்கன் - கொடுமையில் பெரிய வேகத்தையுடையனான இராவணனுடைய
எரி விழித்து இலங்கு மணிமுடி பொடி செய்து - அக்நிபோன்று விளங்கின மணிகளழுத்தின கிரீடங்களைப் பொடிபடுத்தி
இலங்கை - லங்காபுரியை
பாழ்படுப்ப - பாழாக்கி விடவேணுமென்று ஸங்கல்பித்து
விளக்க உரை
அரிகுலம் - ‘ஹாரிகுலம்’ என்ற வடசொல் தொடர்விகாரம். ஹாரி – குரங்கு.
English Translation
The wicked looking Rakshasa, unexcelled in his tyranny, separated the curl-tressed coral-lipped lady Sita from her Lord. With the intent of destroying Lanka the Lord subdued the ocean with this terrible bow and built a bridge over it with rocks. He entered the city with an army of monkeys and felled the ten crowned heads of the mighty Ravana. He is the resident of Arangama-Nagar.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்