- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்
மேவித் திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாட* பாவம் போமே.
காணொளி
பதவுரை
காலி பெரு நீர் வண்ணன் கண்ணன் - கருநெய்தற் பூப்போலவும் கடல்போலவும் நிறமுடையனான எம்பெருமான்
மேவி திகழும் கூடலூர் மேல் - பொருந்தி விளங்கப்பெற்ற கூடலூர் விஷயமாக
கலியன் - திருமங்கைமன்னன்
கோவை தமிழால் சொன்ன - ஒழுங்கான தமிழினால் அருளிச் செய்த
பாவை - இப்பாசுரங்களை
விளக்க உரை
காவி – நீலோற்பலம். காவிப் பெருநீர் – உம்மைத்தொகை. கோவைத் தமிழ் - ஒழுங்கான தமிழ். கோக்கப்பட்ட மாலைக்கும் கோவை யென்று பெயராதலால், மாலைபோல் போக்கியமான தமிழ் என்னவுமாம்.
English Translation
Those who can sing this garland of sweet Tamil songs by Kaliyan,-on the dark water-lily-hued krishna who resides in Kudalur, -will destroy karmas.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்