- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘தொண்டர்பால்’ என்றது உலகளக்குங் காலத்தில் ஆங்காங்குள்ள தொண்டர்கள் ஏத்தினபடியைச் சொன்னவாறு. ‘சுடர் சென்றணவ’ என்றது மேலே ஜ்யோதிர்மண்டலத்தளவும் ஓங்கினபடியைச் சொன்னவாறு. ஆகவிப்படி ஓங்கியுலகளந்த வுத்தமன் வாழுமிடம் திருக்கூடலூர். (வண்டலலையுள் இத்யாதி.) வண்டலிட்டிருக்கும் நீர்நிலங்களிலே கெண்டை மீன்கள் செருக்காலே துள்ளும்போது அவற்றின் உடல் மின்னல் மின்னினாற்போலேயிருக்கும் ; அதனைக்கண்ட மேகங்கள் தம்மிடத்து மின்னுகின்ற மின்னலின் ஒளியே யென்று நினைத்து மின்னலுக்கு அடுத்தபடியாக வுண்டாகவேண்டிய கர்ஜனையைச் செய்கின்றனவாம்.
English Translation
The Lord worshipped by devotees, is manifest everywhere upto the sky, touching the sun. He resides in kulalur where kendai-fish sparkle and dance seeing which the clouds mistake them for lightning and begin to roar!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்