- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
செறும் திண்* திமில் ஏறு உடைய* பின்னை
பெறும் தண் கோலம்* பெற்றார் ஊர்போல்*
நறும் தண் தீம்* தேன் உண்ட வண்டு*
குறிஞ்சி பாடும்* கூடலூரே.
காணொளி
பதவுரை
செறும் திண்திமில் ஏறு - மேல் விழுவனவாய் திடமான முசுப்புக்களையுடையனவான ரிஷபங்கள்
உடைய - பங்கமடைய,
பின்னை பெறு தண் கோலம் - நப்பின்னைப் பிராட்டியினுடைய பெறுதற்கு விரும்பத்தகுந்ததான அழகிய திருமேனியை
பெற்றார் - (ஏறுதழுவி) மணஞ் செய்து கொண்ட பெருமானுடைய
ஊர் - திவ்யதேசம் (எதுவென்றால்)
விளக்க உரை
ஏறு உடைய பின்னை = ரிஷபங்களை யுடையளான நப்பின்னை என்றதாகக் கொண்டு, ரிஷபங்களின் வலியடக்குதலைத் தனக்கு சுல்கமாகவுடைய நப்பின்னை என்னவுமாம். கோலம் - அழகுக்கும் உடம்புக்கும் பெயர். மூன்றாமடியில் ‘தண்டீன்’ என்று பலரும் ஓதுவது பொருந்தாது. ‘தண்டீம்’ என்றே ஓதுக. தண் + தீம், தண்டீம். தீம் - இனிமை
English Translation
Krishna received the beautiful Nappinnal as a prize for his subduring the seven bulls in a fight, He resides in Kudalur where bees drink fragrant nectar and sing kurinji panns.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்