- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(அரவணையாய்) எம்பெருமான் திருவனந்தாழ்வானாகிற படுக்கையைவிட்டு க்ருஷ்ணனாகத் தோன்றினாலும் சென்றாற் குடையாம் என்கிறபடியே அவ்வக்காலத்துக்கு ஏற்ற கோலங்கொண்டு அடிமை செய்பவனான கரத்திருவனந்தாழ்வான் கண்ணபிரானுக்குத் திருப்பள்ளி மெத்தையாய் இனிது தூங்குவதற்கு உதவுகின்றானென்க. அம்ம முண்ண என்றது - கண்ணனுடைய குழந்தைப் பருவத்திற்குத் தக்கபடியாக யசோதை சொல்லியதாகும். சிங்கம் முதலியவற்றின் ஆணை யுணர்த்துகின்ற ஏறு என்ற பெயர் இலக்கணையால் ப்ரதாநன என்ற பொருளைத்தரும். இரண்டாமடியின் ஈற்றிலுள்ள ஆல் - ஆதலால் என்பதன் சிதைவு; இனி ஆல் ஓ - இரண்டும் இரக்கப் பொருளைக் குறிப்பன வென்றுமாம். வயிறசைந்தாய் = நன்னூலார் சினை வினை சினையொடும் முதலொடுஞ் செறியும் என்றாராதலின் சினைவினை முதலோடு செறிந்ததென்க. வனப்புமுலை என்கிறவிது - வனமுலை என்று விகாரப்பட்டதென்பர்; வனமே நீரும் வனப்பு மீமமுந் துழாயும் மிகுதியுங் காடுஞ் சோலையும் புற்றுமனவே புகலுமெண் பேரே என்ற நகண்டின்படி வனம் என்ற சொல்லோ அழகைக் குறிக்குமென்பதும் பொருந்தும்.
English Translation
O cowherd child, Lord who reclines on a serpent-bed, wake up to take suck. Last night you went to sleep without supper, it is almost mid-day now. I do not see you coming. Your belly is flat, my hea
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்