- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
ஓடாத ஆளரியின்* உரு ஆகி இரணியனை*
வாடாத வள் உகிரால்* பிளந்து அளைந்த மாலது இடம்*
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கைதன்னுள்*
சேடு ஏறு பொழில் தழுவு* திருத்தேவனார்தொகையே.
காணொளி
பதவுரை
ஓடாத ஆள் அரியின் உரு ஆகி - நாட்டில் நடமாடாமல் அபூர்வமான நரஸிம்ஹ மூர்த்தியாகி
வாடாத வள் உகிரால் - வளையாத கூர்மைமிக்க நகங்களினால்
இரணியனை பிளந்து அளைந்த மாலது - ஹிரண்யாஸுரனைக் கிழித்து (ரத்தப்பெருக்கிலே) அளைந்து கொண்டிருந்த எம்பெருமானுடைய
இடம் - திருப்பதி (எதுவென்றால்)
ஏடு ஏறு பெரு செல்வத்து - புத்தகங்களிலே எழுதி வைக்கத்தக்க மிகுந்த ஐச்வரியத்தை யுடையராய்
விளக்க உரை
ஏடேறு பெருஞ்செல்வத்து – எம்பெருமானுடைய பெருமையளை ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ பாரதம் முதலிய இதிஹாஸங்களாக ஏடுபடுத்தி வைத்திருப்பது போலப் புத்தகங்களாக எழுதி வைக்கத்தகுந்த பெருஞ்செல்வமுடையார் திருநாங்கூர்வைதிகர்கள் என்கை. ஏடு என்று குற்றத்திற்கும் வாசகமாகையாலே குற்றமற்ற பெருஞ்செல்வத்தினர் என்று முரைப்பர். ஏறுகை – மாண்டுபோகை.
English Translation
The Lord, who came as a wonder-man-lion and tore apart the Asura Hiranya’s chest with sharp claws, resides at Nangur among bright Vedic seers, --whose wealth of knowledge should go on record, --amid the fragrant groves in Tiruttevanar Togai.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்