- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
ஓடாத ஆள்அரியின், உருவம்அது கொண்டு* அன்றுஉலப்பில் மிகுபெருவரத்த, இரணியனைப்பற்றி*
வாடாத வள்உகிரால் பிளந்து, அவன்தன் மகனுக்கு* அருள்செய்தான் வாழும்இடம், மல்லிகைசெங்கழுநீர்*
சேடுஏறு மலர்ச்செருந்தி, செழுங்கமுகம் பாளை* செண்பகங்கள் மணம்நாறும், வண்பொழிலின்ஊடே*
ஆடுஏறு வயல்ஆலைப், புகைகமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!
காணொளி
பதவுரை
அவன் தன் மகனுக்கு அருள் செய்தான் - அவனது புத்திரனான ப்ரஹ்லாதனுக்கு க்ருபை பண்ணின பெருமான்
வாழும் இடம் - எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசம்
மல்லிகை செங்கழுநீர் - மல்லிகைகளும் செங்கழுநீர் களும்
சேடு ஏறு மலர் செருந்தி - திரள் திரளாகப் பூத்த பூக்களையுடைய ஸூர புன்னைகளும்
செழு கமுகம் பாளை - அழகிய பாக்குப் பாளைகளும்
விளக்க உரை
English Translation
Then in the yore, the Lord came as a man-lion of boundless strength and took the boon-intoxicated Hiranya on his lap, then tore his chest with sharp, hard claws, to protect the devotee-son. He resides permanently in Nangur where the fragrance of Jasmine, red water-lily, thickly flowering Serundi, Areca fronds and Senbakam flowers from the groves mingle with the thick smoke from the burning sugarcane mills. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்