- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருத்தாயார் சொல்லத் தொடங்கும்போதே “கள்வன் கொல்” என்று எம்பெருமானைத் கள்ளனாகச் சங்கித்துச் சொல்கிறாள். சாஸ்த்ரங்களில் சேதநனைக் கள்வனாகச் சொல்லியிருக்கிறது; கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா” என்றது. எம்பெருமானுக்கே உரிமைப்பட்டதான ஆத்மாவை ஸ்வசேஷமாகவும் அந்ய சேஷமாகவுங் கருதுகின்ற சேதநன் ஆத்மாபஹாரக கள்ளனெனப்படுகிறான். தன் உடமையைத் தான் கைக்கொள்ளுகிற எம்பெருமானைக் கள்வனென்று சொல்லத்தகாது. ஆயினும், “ யானே என்றனதே” (2883) என்றிருக்கும் அஹங்கார மமகாரங்கள் நெடுநாளாக சேதநனிடத்து ஆழந்திக்கிடக்கும் வாஸநையி னுறைப்பினால் தன்னுடைய கள்ளத் தனத்தை எம்பெருமான்மீது ஏறிடலாகுமென்பது தோன்றக் கள்வன்கொல் என்கிறது. “செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்து ஆட்செய்மின், திருமாலிருஞ்சோலை வஞ்சக்கள்வன் மாமாயன்” (3733) என்றதுங் காண்க.
English Translation
Was he a thief? I do not know. A dark bull-youth came to my slender-waisted fawn-eyed daughter saying, “Come!”, and held her bangled hand in his. Leaving me, her mother, she left. Would they have entered the beautiful Tiruvali surrounded by lotus-filled lakes and fields? O, Alas!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்