- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“அரவணை வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன் மனத்திருந்தாய்” என்ற சொற்சேர்த்தியால் - அடியேனுடைய மனத்தில் ஸமயம் பார்த்து வந்து சேர்வதற்காகவே நீ திருப்பாற்கடலில் உபாய சிந்தனை பண்ணிக்கொண்டு கிடந்தாய் என்ற கருத்து விளங்கும். நீலநிறத்ததொரு மலையின்மேல் மாமணிவிளங்குவது போலத் திருப்பாற்கடலில் அரனணைமேற் கிடந்தாய் என்றவிதனில், நீலமலையின் ஸ்தாநத்திலே எம்பெருமானையும் மாமணியின் ஸ்தாநகரத்திலே ஸ்ரீகௌஸ்துப மணியையும் உபமேயமாகக்திலே கொள்ளவேணும். ஆகவே “அரவனை வேலைத்தலை” என்ற வாக்கியத்திற்கு உபமேயகோடியில் அந்வயமில்லை; அந்வயம் வேணுமென்னில்; எம்பெருமானுடைய கரிய திருமேனியின் நிழலீட்டாலே பாற்கடலும் பாம்பனையும் நீலநிறம் பெற்றன வென்றுகொண்டு, பாற்கடற்பாம்பமையை நீலத்தடவரைக்கு உபமேயமாகவும் எம்பெருமானை மாமணிக்கு உபமேயமாகவும் கொள்ளலாம்.
English Translation
O, Lord of beautiful Tiruvali! The smoke from the sugarcane bagasse rises like dark rain clouds over fragrant groves where peacocks dance in big numbers. You recline in the deep ocean on a serpent bed like a bright gem on a dark mountain. Today you have entered my heart.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்