- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
குரங்கு+இனம், குரக்கினம்; குரங்குகளைக் கூறியது சபலரான ஸம்ஸாரிகளைக் கூறியவாறாம். நின்றவா நில்லா நெஞ்சினை யுடையராய் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகிற க்ஷூத்ர பலார்த்திகளான ஸம்ஸாரிகளுக்கும் வாநரங்களுக்கும் ஸாம்யம் பொருந்துமன்றோ: இப்படிப்பட்ட ஸம்ஸாரிகள் விஷய போகங்களிலே மண்டித் திரியாநிற்கச் செய்தேயும் பலங்கனி போன்ற பகவத் குணங்களையும் இடையிடையே அநுபவித்து வாழும்படியைக் கூறியவாறு. வேங்கைமரம், கோங்குமரம், செண்பகமரம் ஆகிய இவற்றின் பூக்கள் பொன்னிறமா யிருக்குமாதலால் ‘ பொன்மலர்திகழ்’ என்றது. இம்மரங்களைச் சொன்னது (ஸ்வாபதேசத்தில்) நெஞ்சைக் கவர்கின்ற விஷயாந்திரங்களைச் சொன்னபடி, “குதிகொடு” என்றதில், குதி-முதனிலைத் தொழிற் பெயர்: “கொம்பேற்றியிருந்து குதி பயிற்றும்” என்றார்பெரியாழ்வாரும்.
English Translation
The Lord who went to Mabali’s sacrifice and measured the Earth, the Lord who subdued seven bulls for the cowherd-dame Nappinnai resides in Tiruvayindirapuram where monkeys in hordes jump on Vengai, Kongu and senbakam trees, raining flowers of gold, then go and eat honey-dripping jackfruit.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்