- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பார் ஏறு பெரும் பாரம் தீரப்* பண்டு பாரதத்துத் தூது இயங்கி*
பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை* செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை*
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்* புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்*
சீர் ஏறு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
காணொளி
பதவுரை
பார்ஏறு பெரு பாரம் தீர - பூமியின் மேலேறிக் கிடந்த பாரங்கள் தொலைவதற்காக
பண்டு - முற்காலத்தில்
பாரதத்து தூது இயங்கி - பாரத யுத்தம் ஸமீபித்தபோது தாதுசென்றவனும்
பார்த்தன் - அர்ஜுநனுடைய
செல்வம் தேர்ஏறு சாரதி ஆய் - அழகிய தேரையேறி நடத்தின பாகனாகி
விளக்க உரை
English Translation
To rid the world of its heavy burden the Lord entered the Bharata war as a messenger then drove the chariot for Arjuna and destroyed the army of kings in combat. The bull-rider Siva, Vaisravana, Indra, Brahma and all the other gods are gathered in the wealthy town with Vedic seers in good measure. I have seen Him in the beautiful temple of Tirukkovalur.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்