- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தூண் ஆய் அதனூடு* அரியாய் வந்து தோன்றி*
பேணா அவுணன் உடலம்* பிளந்திட்டாய்!*
சேண் ஆர் திருவேங்கட* மா மலை மேய,*
கோள் நாகணையாய்!* குறிக்கொள் எனை நீயே.
காணொளி
பதவுரை
தூணாயதனூடு - வெறும் தூணாகவேயிருக் கிறவதற்குள்ளே
அரி ஆய் - நரஸிம்ஹமாகி
வந்து தோன்றி - திருவவதரித்து,
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய் - (தன்னை) மதியாத ஹிரண்ய கசிபுவின் சரீரத்தைக் கிழித்துப் போகட்டவனே!
சேண் ஆர் - மிக்க உயர்த்தி பொருந்திய
விளக்க உரை
பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவை ஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹலாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன்மீதும் அருள் செய்யவேணுமென்கிறார்.
English Translation
O Serpent-reclining Lord, Resident of Venkatam hills rising high! You appeared as a man-lion froin out of a pillar, and split the mig’hty chest of the haughty Hiranya. Pray take notice of me.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்