திவ்யதேச பாசுரங்கள்
-
1268.
பிராட்டிக்கு ‘வாரணிமுலையாள்’ என்று இட்ட விசேஷணம் அவளுடைய நித்யயௌவனத்தைக் காட்டுதற்கென்க. நாங்கைநன்னடுவுள் - ‘செம்பொன்செய்கோயில்’ என்னுந் திருப்பதி திருநாங்கூரில் நட்டநடுவில் உள்ளது; இவ்வாழ்வார்தாமும் இத்திருப்பதியின் மங்களாசரஸநபரமான இத்திருமொழியைத் திருநாங்கூர்ப்பதிகங்கள் பதினொன்றின் நன்னடுவே அமைத்தருளின அழகும் ஆராயத்தக்கது. “நந்தாவிளக்கே” என்று தொடங்கி “கவளயானை கொம்பொசித்த” என்ற திருமொழியளவாகப் பதினொரு திருமொழிகள் திருநாங்கூர்த் திருப்பதிகளைக் கவிபாடுவன; அவற்றுள் கீழே ஐந்து திருமொழிகள் சென்றன; மேலே ஐந்து திருமொழிகளுள்ளன; இத்திருமொழி நன்னடுவே உள்ளது எனக்காண்க.
பேதியாவின்ப வெள்ளத்தை – ஆநந்த முடைமை ஜீவாத்மாவுக்கு மிருந்தாலும் பிரகிருதி ஸம்பந்தத்தாலே அதற்குக் குறைவு உண்டாகிறது; இப்படியல்லாமல் எம்பெருமானுடைய ஆநந்தமயத்வம் ஒரு உபாதியினாலும் பேதப்படாதிருக்குமென்க. பேதியா – பேதியாத; விகாரமடையாத. இன்பவெள்ளத்தை – இன்பவெள்ளமே ஸ்வரூபமாயுள்ளவனை. எம்பெருமான் இன்னகாலத்திலுள்ளான், இன்ன காலத்திலில்லை என்னவொண்ணாதபடி எக்காலத்தும் உள்ளமைபற்றி ‘இறப்பெதிர் காலக் கழிவுமானானை’ என்றது. ‘கழிவும்’ என்றது – கழிந்துகொண்டே செல்லுகிற நிகழ்காலத்தைச் சொன்னபடி. ஏழிசையன் சுவை தன்னை - ஸப்தஸ்வரங்களிலுமுண்டான ரஸமே ஒருவடிவு கொண்டாற்போல் பரமபோக்யனானவனை.
திடப்பொருள்கள், ஆகாயம், காற்று, நீர், நிலம் இவையெல்லாவற்றிலும் படர்ந்த பொருள் ஆனவன் அவைகளில் உடலுக்குள் உயிர்போல மறைந்து உள்ளேயும் வெளியேயும் வியாபித்தவன். வேதத்தில் உள்ளவன். இவைகளையெல்லாம் உண்டவனும் இவனே. நம்மாழ்வாரின் கடவுள் தத்துவத்தின் அடிப்படையான விசிஷ்டாத்வைதக் கருத்துக்களின் அடிப்படையும் ஆனது இப்பாடல். பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருள்களிலும் சாரமாக விரவியிருப்பவன் கடவுள் என்கிற தத்துவத்தை விஞ்ஞானத்தால் கூட இந்த நாட்களில் மறுக்க முடிவதில்லை.
சயமெ – ‘ஸ்வயம்’ என்ற வடசொல்லும் சயமெனத் திரியும், ‘ஜயம்’ என்ற வடசொல்லும் சயமெனத் திரியும்; சயம் மே - ஸ்வயமாகவே வந்து மேவியிருக்கப் பெற்ற தலம். (அன்றியே) ‘ஜய விஜயீ பவ’ என்று பல்லாண்டுபாடும்படியான ஜயசப்தங்கள் மேவப்பெற்ற என்னவுமாம். இனி, என்னும் வடசொல் ஸமூஹமென்னும் பொருள் கொண்டதாதலால் அதுவே இங்குச் சயமெனத் திரிந்ததாகக்கொண்டு ‘ஸமூஹமான தேமலர்ப் பொழிலையுடைய’ என்று முரைப்பர். வாமனைப் பயந்தான்றன்னை – கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியிடத்தில் மந்மதனுடைய அம்சமான ப்ரத்யும்நனைப்பெற்ற வரலாறு அறிக
கடல் ரத்னங்களுக்குப் பிறப்பிடமாதலால் ‘மல்லைமா முந்நீர்’ எனப்பட்டது. த்ரி கூடமென்னும் மலையின் சிகரத்திலே இலங்கைமாநகர் இயற்றப்பட்டதாதலால் ‘கல்லின் மீதியன்ற’ எனப்பட்டது. கல் - மலைக்கு ஆகுபெயர். கடி – அரண்.
முதலடியில், வெகுண்டு, இறுத்து, அடர்ந்து என்பவை முறைமுறையே களிற்றிலும் வில்லிலும் மல்லிலும் இயையக் கடவன: களிற்றை வெகுண்டவன், வில்லை இறுத்தவன், மல்லை அடர்த்தவன் என்க. இம்மூன்று காரியங்களும் கம்ஸவதத்திற்கு முந்துற முன்னம் நடந்தவை.
மன்றதுபொலிய – பலர்திரட்சியாகக் கூடுமிடத்திற்கு ‘மன்று’ என்று பெயர்; ‘நாங்கை நாலாயிரம்’ என்ற பழமொழியின்படி நாலாயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்ந்தவிடமாயிருந்தது பற்றி “மன்றதுபொலிய” என்கிறார் என்னலாம்: (அது-முதல்வேற்றுமைச்சொல்லுருபு.)
தெளிந்த நான்மறையோர் – ஒருஸமயத்தில் ஸர்வேச்வரன் ரக்ஷகனென்றிருப்பது, மற்றொரு ஸமயத்திலே மற்றொன்று ரக்ஷகமென்றிருப்பது, ஆக விப்படி மாறிமாறிக் கலங்கு கையின்றியே, எக்காலத்திலும் எவிவிடத்திலும் எவ்வவஸ்தையிலும் எம்பெருமானே ரக்ஷகன் என்னும் தெளிவுடையார் வாழுந்திருநாங்கூர் என்க. இப்படிப்பட்ட தெளிவுடையார்க்குக் காட்சி கொடுத்துக்கொண்டு நிற்கப்பெற்றோமே யென்னும் மகிழ்ச்சி வடிவிலே தோன்ற நின்றமயால் “வளங்கொள் போரின்பம் மன்னிநின்றானை” என்றார்.
விளக்கம்
1269.
விளக்கம்
1270.
விளக்கம்
1271.
விளக்கம்
1272.
விளக்கம்
1273.
விளக்கம்
1274.
விளக்கம்
1275.
விளக்கம்
1276.
விளக்கம்
1277.