திவ்யதேச பாசுரங்கள்
-
1298.
கஜேந்திராழ்வானைக் காத்தருளினதுபோல எம்போலியரையும் பஞ்சேந்திரியங்களாகிற ஐந்து முதலைகளின் வாயில் நின்று விடுவித்துக் காத்தருள்வதற்காகத் திருநாங்கூரில் ஒரு பகுதியான திருக்காவளம்பாடியென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் பிரானே! எமக்கு நீயே ரக்ஷகனாகவேணும்; நீ தவிர வேறொருவனையும் யாம் ரக்ஷகனாகவுடையோமல்லோம் என்றாராயிற்று.
உருத்து – ‘உரு’ என்று கோவத்திற்குப் பெயர்; அச்சொல்லடியாப் பிறந்த வினையெச்சம். ‘சற்று முன்னே சண்டைக்குவந்து தோற்றோடிப்போன பையல் மறுபடியும் வெட்கமின்றி வந்தானே!’ என்று கோபமூண்டு கிளம்பி வந்த வாலி என்றபடி. ஒருகணை உருவவோட்டி – வாலியின் மார்பில் எத்தனையோ வீரர்கள் அம்புகளைப் பிரயோகித்ததுண்டு; அவையெல்லாம் வாய் மடிந்துபோயின வத்தனையொழிய ஒன்றேனுங் காரியஞ்செய்யவில்லை; இராமபிரானுடைய கணையே காரியஞ்செய்ததுபற்றி ‘ஒருகணை’ எனப்பட்டது. கருத்துடைத்தம்பிக்கு – ‘வாலி ஆண்ட ராஜ்யத்தை நாம் ஆளவேணும்’ என்ற கருத்துடைய ஸுக்ரிவனுக்கு – என்றாவது, தன்னோடு ஸ்நேஹங்கொண்டதனால் ஒத்த கருத்தையுடையனான ஸுக்ரிவனுக்கு என்றாவது உரைக்கலாம். கர்த்தா என்னும் வடசொல் கருத்தன் எனத்திரிந்து விளிபுருபேற்றது.
(சுனைகளில் இத்யாதி.) வண்டுகள் பூக்களிலே படிந்து மதுபானம் பண்ணும்போது பெரிய கோலாஹலமாயிருக்கும்; அது தண்ணீரிலுள்ள மீன்களின் காதுகளில்படவே அவை தம்மேலே வண்டுகள் விழுகின்றனவாக நினைத்து அஞ்சிப் பாய்கின்றனவாம்.
மாத்தமர்பாகன் - ‘மஸ்தகம்’ என்னும் வடசொல் ‘மத்தகம்’ எனத் திரிந்து அது ‘மாத்து’ எனச் சிதைந்தது. மதகரி – வடசொல் தொடர்.
ஏவிளங்கன்னிக்காகி – ஏவு - ‘இந்தப் பாரிஜாத விருக்ஷத்தை என் வீட்டு முற்றத்தில் கொண்டு நட்டுவிடு’ என்று ஏவின, இளங்கன்னிக்காகி – என்று முரைக்கலாம்.. அம்மரத்தைக் கருடனைக்கொண்டு போருமளவில் இந்திரன் அஃதறிந்து வஜ்ராயுதத்தைத் தீட்டிக்கொண்டு போர்புரிய வந்து பங்கப்பட்டுப் போயினன் என்பதும் இங்கு அறியத்தக்கது. அதுதோன்ற “இமையவர் கோனைச் செற்று” எனப்பட்டது. புரந்தரன் செய்த நாங்கை - ஸ்வர்க்க லோகத்திற்கு உண்டான ஏற்றம் பூலோகத்திற்கு முண்டாகவேணும் என்று கருதின தேவேந்திரன் ஸ்வர்க்கலோகத்துக் கட்டளையாகவே திருநாங்கூரை அமைத்தனன் என்று ஒரு இதிஹாஸ முண்டென்பர். புரந்தான் - வடசொல்
காயத்ரி, த்ரிஷ்டுப், ஜகதீ, அநுஷ்டுப், பங்க்தி என்றிப்படி சொல்லப்படுகிற சந்தஸ்ஸுக்களெல்லாம் நீயேயாகின்றாய்; ‘இத்தனை அக்ஷரங்கள் கூடினால் இன்ன சந்தஸ், இத்தனை அக்ஷரங்கள் கூடினால் இன்ன சந்தஸ்’ என்றிப்படி வ்யவஸ்தைகள் பண்ணினவனும் நீயே; ஸ்வபாவ நியமத்தோடு கூடின பஞ்சபூதங்களுக்கு நியாமகனும் நீயே; காரியப் பொருள்களெல்லாம் அழிந்து கிடந்த காலத்து எல்லாம் தன் பக்கலிலே வயித்துத் தானொருவனே என்னும்படி யிருக்குமவனும் நீயே. இவற்றையெல்லாம் விபாகம்பண்ணிக் காரியங்கொள்ள நினைத்த காலத்து இவற்றுக்கெல்லாம் காரணபூதனாக நின்றவனும் நீ: இவ்விதமாக வேதங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும் நீயே; இப்படிப்பட்ட நீ காவளம்பாடியில் வந்து ஸேவை ஸாதியாநின்றாய்; நீயே எமக்கு ரக்ஷகன் என்றாராயிற்று. சமயம் - வடசொல். (ஸமயமாவது – வியவஸ்தை.) மூன்றாமடியில் ‘மந்தாரம்’ என்ற வடசொல் மந்தம் எனச் சிதைந்து கிடக்கிறது. கந்தம் - பரிமளம்.
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:- “மோக்ஷத்தைப் மாகச் சொல்லில் அதிகாரிகளைக் கிடையாதென்று, அபிமதஸாதன மென்னவே கற்பர்கள்; பின்னை மோக்ஷத்திலே கொடுபோய் மூட்டுகிறோமென்று ஐச்வர்யத்தைப் பலமாகச் சொல்லிற்று.” என்று.
விளக்கம்
1299.
விளக்கம்
1300.
விளக்கம்
1301.
விளக்கம்
1302.
விளக்கம்
1303.
விளக்கம்
1304.
விளக்கம்
1305.
விளக்கம்
1306.
விளக்கம்
1307.