நேரிசை வெண்பா
    அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
    மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
    ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
    வேயர் பயந்த விளக்கு.
     
    கட்டளைக் கலித்துறை
    கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
    சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
    மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
    சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction