2 எண்ணிக்கை பாடல் பாட

திருக்கண்டேன்*  பொன்மேனி கண்டேன்,*  திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்,* - செருக்கிளரும்
பொன்ஆழி கண்டேன்*  புரி சங்கம் கைக்கண்டேன்,* 
என்ஆழி வண்ணன்பால் இன்று  (2)

பண்டுஎல்லாம் வேங்கடம்*  பாற்கடல் வைகுந்தம்,* 
கொண்டுஅங்கு உறைவார்க்கு கோயில்போல்,* - வண்டு
வளம்கிளரும் நீள்சோலை*  வண்பூங் கடிகை,* 
இளங்குமரன் தன் விண்ணகர்.  (2)

தொட்ட படைஎட்டும்*  தோலாத வென்றியான்,* 
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* - குட்டத்துக்
கோள்முதலை துஞ்ச*  குறித்துஎறிந்த சக்கரத்தான்* 
தாள்முதலே நங்கட்குச் சார்வு  (2)

சார்வு நமக்குஎன்றும் சக்கரத்தான்,*  தண்துழாய்த் 
தார்வாழ்*  வரைமார்பன் தான்முயங்கும்,* - கார்ஆர்ந்த
வான்அமரும் மின்இமைக்கும்*  வண்தாமரைநெடுங்கண்,* 
தேன்அமரும் பூமேல் திரு.  (2)