2 எண்ணிக்கை பாடல் பாட
நிதியினை பவளத் தூணை* நெறிமையால் நினைய வல்லார்,*
கதியினை கஞ்சன் மாளக்* கண்டுமுன் அண்டம்ஆளும்,*
மதியினை மாலை வாழ்த்தி* வணங்கிஎன் மனத்து வந்த,*
விதியினைக் கண்டு கொண்ட* தொண்டனேன் விடுகிலேனே (2)
பிண்டியார் மண்டை ஏந்தி* பிறர்மனை திரிதந்துஉண்ணும்-
உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவன்ஊர்,* உலகம் ஏத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம்* கச்சிபேர் மல்லை என்று-
மண்டினார்,* உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல்ஆமே? (2)
வானவர் தங்கள் கோனும்* மலர்மிசை அயனும்,* நாளும்-
தேமலர் தூவி ஏத்துவடிம்* சேச் செங்கண் மாலை,*
மானவேல் கலியன் சொன்ன* வண்தமிழ் மாலை நாலைந்து,*
ஊனம்அதுஇன்றி வல்லார்* ஒளிவிசும்பு ஆள்வர் தாமே (2)