2 எண்ணிக்கை பாடல் பாட
அமலன் ஆதிபிரான்* அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்-
கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டம் உற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரைக்,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்* கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்*
சிவந்த ஆடையின் மேல்* சென்றதுஆம் என சிந்தனையே (2)
மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
அந்தி போல் நிறத்து ஆடையும்* அதன்மேல் அயனைப் படைத்ததுஓர் எழில்*
உந்தி மேலதுஅன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே (2)