விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?*  இறையவர் பதினொரு விடையரும் இவரோ?* 
    மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?*  மருதரும் வசுக்களும் வந்து வந்துஈண்டி'*
    புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் * குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்,*
    அருவரை அனைய நின் கோயில்முன் இவரோ?*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மணி - விலக்ஷணமாய்
நெடு - பெரிதான
தேரோடும் - தேரோடுகூட
இரவியர் - பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர் - ஜகத்துக்கு நிர்வாஹகர்களான

விளக்க உரை

பன்னிரண்டு ஆதித்யர்களும், ஏகாதசருத்ரர்களும், தேவசேனாதிபதியானசுப்ரமணியனும், தேவதைகள் மற்றும் அஷ்டவசுக்கள் ஆகிய எல்லோரும் தேவரீர் பள்ளி உணர்ந்தருளும் சமயத்தில் முதல் கடாக்ஷம்தம்மதாக இருக்க, மலை போன்று திரண்டு நிற்கிறார்கள், எம்பெருமான் பள்ளிஎழுந்தருளாயே என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

English Translation

This here is the Sun god, rider of the jeweled chariot. This here is the Lord of the eleven Adityas. This here is the six, faced Subramanya, rider of the peacock. These here are the Maruts and the Vasus in throngs, dancing and singing in delight crowding the great hall in front of your sanctum. O Lord of Arangam, pray wake up.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்