விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆனைகாத்து ஒர் ஆனைகொன்று*  அதுஅன்றி ஆயர் பிள்ளையாய்,* 
    ஆனைமேய்த்தி ஆனெய் உண்டி*  அன்று குன்றம் ஒன்றினால்,*
    ஆனைகாத்து மைஅரிக்கண்*  மாதரார் திறத்து, முன்* 
    ஆனைஅன்று சென்றுஅடர்த்த*  மாயம் என்ன மாயமே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆனை காத்து - கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி
அது அன்றி - அவ்வளவேயல்லாமல்
ஆயர்பிள்ளை ஆய் - கோபாலகுமாரனாகி
ஓர் ஆனை கொன்று - குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று
ஆனை - பசுக்களை

விளக்க உரை

இரண்டாமடியில், ஆனை= ஆன் ஐ; ஆன்- பசு ஜாதி; ஐ- இரண்டாம் வேற்றுமையுருபு. மேய்த்தி. உண்டி = முன்னிலையொருமை வினைமுற்றுக்கள். மூன்றாமடியில் “ஆனைக்காத்து” என்று ஸந்தியாகவேண்டுமிடத்து ‘ஆனைகாத்து’ என இயல்பாக நின்றது எதுகை நயம் நோக்கியென்க. ஆ என்றும் ஆன் என்றும் நோக்களுக்குப் பெயர்.

English Translation

You saved an elephant in distress, you killed an: elephant in the rut. You came as grazing cowherd lad and ate the stolen white butter. You lifted high the mountain and you stopped the foaming rains above. You killed the bulls in contest for the dark eyed lady Nappinnai!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்