விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பார் ஆளும் படர் செல்வம்*  பரத நம்பிக்கே அருளி* 
    ஆரா அன்பு இளையவனோடு*  அருங்கானம் அடைந்தவனே* 
    சீர் ஆளும் வரை மார்பா*  திருக் கண்ணபுரத்து அரசே* 
    தார் ஆரும் நீண் முடி*  என் தாசரதீ தாலேலோ     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பார் ஆளும் படர்செல்வம் - பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய ஸம்பத்தை;
பரதன் நம்பிக்கே - ஸ்ரீ பரதாழ்வானுக்கே;
அருளி - நியமித்துவிட்டு;
ஆரா அன்பு இளையவனோடு - பரிபூர்ணமான பக்திப்பெருங்காதலையுடைய இளையபெருமாளுடன் கூட;
அருகானம் அடைந்தவனே - (புகுவதற்கு) அருமையான காட்டைக் குறித்து எழுந்தருளினவனே;

விளக்க உரை

வநவாஸஞ் செல்லும்போது இராமபிரான் இளையபெருமாளை நோக்கி இளையோய் நான் போகிறேன். நீ இங்கேயிருப்பாயாக என்றபோது, அவர் தமது கைங்கரியருசியையும் பிரியில் தரியாமையையும் பரக்கப்பேசித் தம்மையுங்கூட்டிக் கொண்டு போகும்படி செய்தனராதலால் ஆராவன்பிளையவனோடு என்றார். (அருங்கானம்) கல் நிரைந்து தீந்து கழையுடைந்து கால்சுழன்று பின்னுந் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவாக், கொன்னவிலும் வெங்கானம் (பெரிய திருமடல்) என்றார் கலியனும்.

English Translation

Sleep. O Illustrious Dasarathi with long hair adorned by a Tulasi wreath, Talelo! O king of Tiru Kannapuram with a strong mountain-like chest! You gave up the wealth of kingship to your brother Bharata; and went into the forest with your devoted brother Lakshmana!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்