விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மெய் இல் வாழ்க்கையை*  மெய் எனக் கொள்ளும்*  இவ்
    வையம்தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
    ஐயனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
    மையல் கொண்டொழிந்தேன்*  என்தன் மாலுக்கே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மெய்யில் வாழ்க்கையை - ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே;
மெய் என கொள்ளும் - பாரமார்த்திகமாகக் கருதுகின்ற;
இவையம் தன்னொடும் - இவ்வுலகத்தாரோடு;
யான் கூடுவது இல்லை - (இனி) நான் சேர்வதில்லை;
ஐயனே - ‘ஸ்வாமீ’;

விளக்க உரை

மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.

English Translation

I cannot mix with people of the world who consider this corporeal life as real. ”My Lord!”, “My Aranga!” is all I can say. I swoon with infatuation for my Lord Mal.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்