விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கார்த் தண் கமலக் கண் என்னும்*  நெடுங்கயிறு படுத்தி*
    என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும்*  ஈசன்தன்னைக் கண்டீரே?* 
    போர்த்த முத்தின் குப்பாயப்*  புகர் மால் யானைக் கன்றே போல்* 
    வேர்த்து நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் - காளமேகத்திலே
தண் - குளிர்ந்த
கமலம் - தாமரை பூத்தாற்போன்றுள்ள
கண் என்றும் - திருக்கண்கள் என்கிற
நெடு கயிறு - பெரிய பாசத்திலே

விளக்க உரை

உரை:1

மேகத்திலே அழகிய இரண்டு தாமரைப்பூக்கள் பூத்தனவோ? என்னும்படி யமைந்த திருக்கண்களாகிற வலையிலே என்னை அகப்படுத்தித் தான் போகுமிடமெங்கும் என்னையும் (அதாவது -என் நெஞ்சையும்) இழுத்துக்கொண்டு முன்னடிகள். முத்துச்சட்டையிட்டாற்போலே குருவெயர்ப்பு அரும்பியபுகரையுடைத்தான யானைக்கன்றுபோலே வேர்த்து நின்று விளையாடும்போது விருந்தாவனத்திலே கண்டோமென்பார் பாசுரம் - பின்னடிகள். கார் - முகம்போலே, தண் -குளிர்ந்த, என்றும் உரைக்கலாம். “குப்பாயமென நின்று காட்சி தருங்கோவர்த்தனமென்னுங் கொற்றக்குடையே“ என்றார் பெரியாழ்வாரும். “மெய்ப்பை கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் குப்பாய மங்கி சட்டையாகும்“ என்பது திவாகரம். கண்ணபிரான் யானைக்குட்டிபோலவும், அவன் வேர்வையரும்புகளை அணிந்து நிற்கும் நிலைமை முத்துச்சட்டை யணிந்திருக்கை போலவும் உவமிக்கப்பட்டுள்ளமை காண்க.

உரை:2

கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்ணினால் நீளமான கயிறைக் கொண்டு என்னைப் படுத்தி என்னைக் கவர்ந்து கொண்டு என்னோடு விளையாடும் இறைவன் தன்னைப் பார்த்தீர்களா ? போர்வை போலப் போர்த்திய முத்துக்களினால் ஆன சட்டை கொண்டு ஒளிர்கின்ற கரும் யானைக் கன்றினைப் போல் வேர்க்க விறுவிறுக்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே.

English Translation

“The Lord has lotus eyes that lead me by a leash. Did you see him go playing this way?” “Like a chubby elephant-calf decked in a blanket of pearls, we saw him sweating and playing in Brindavana”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்