விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நடை ஒன்று இல்லா உலகத்து*  நந்தகோபன் மகன் என்னும்* 
    கொடிய கடிய திருமாலால்*  குளப்புக்கூறு கொளப்பட்டு* 
    புடையும் பெயரகில்லேன் நான்*  போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்* 
    பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்*  போகா உயிர் என் உடம்பையே*      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடைஒன்று இல்லா உலகத்து - (ஏற்கனவே) மரியாதைகளெல்லாம் குலைந்து கிடக்கிற இவ்வுலகத்தில்
கந்தகோபன் மகன் என்னும் - ஸ்ரீகந்த கோபர் மகன் என்று ப்ரஸித்தனாய்
குளப்புக்கூறு கொளப்பட்டு - மிகவும் துன்பப்படுத்தப்பட்டு
புடை பெயரவும் கில்லேன் - அப்படி இப்படி அசைவதற்கும் அசக்தையாயிரா நின்றேன் (ஆனபின்பு,)
போட்கன் - சுணைகேடனான அக்கண்ணபிரான்

விளக்க உரை

உரை:1

ஏற்கனவே உலகத்தல் மரியாதையெல்லாம் சீர்குலைந்து கிடக்கின்றன. அதுக்குமேல் ஒன்றுபத்தாய்ச் சீர்குலையும்படி ஈந்தகோபன் மகனென்கிற ஒரு மஹாநுபாவன் வந்து தோன்றினான். பரமஸாதுவான நந்தகோபனுக்கு இந்தக் கொடியவன் எங்ஙனே பிள்ளையாகப் பிறந்தானோ அறியேன், அவனால் மிகவும் துன்பப்படுத்தப்பட்ட நான் புடைபெயரவும் ஒண்ணாதபடி துவண்டுபோனேன், இந்ததுவட்சி தீருவதற்கு மருந்துயாதெனில், அந்தச் சுணைகேடன் நடந்து சென்ற நிலத்திலுள்ள பொடியைக் கொணர்ந்து என்னுடம்பிலே பூசப்பாருங்கள் அதுவே உற்றமருந்தாகும் என்கிறாள். கொடியகடிய திருமால் -கொடுமையாவது பிறரை வருந்தச் செய்கையாகிற க்ரூரத்தனம், கடுமையாவது தன் காரியத்தை மாத்திரம் விரைந்து முடித்துக்கொள்ளுகையாகிற ஸ்வகார்யபரத்வம், (“கடியன் கொடியன் நெடியமால்“ அநுஸந்திப்பது - இக்கொடுமைகடுமைளெல்லாம் இவனால் அவளிடத்திலிருந்து தான் கற்றுக்கொள்ளப்பட்டனவென்று அவளையும் சேர்த்து வெறுக்கின்றமையைக் கொட்டுமென்ப, “இழவேயாய்ப்போருகிற ப்ரகரண மாகையாலே பேற்றுக்குப் பரிகரமாகச் சொல்ல்லாமவற்றையெல்லாம் இழவுக்குப் பரிகரமாகச் சொல்லுகிறாள்“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்திகாண்க.

உரை:2

'ஏற்கனவே சரியான வழி, சரியான முறை என்பதெல்லாம் முறை தவறி நடக்கும் இந்த உலகத்தில், நந்தகோபன் மகன் என்று பெயரளவிலேயே இருக்கும் (ஆனால் செயலில் நந்தகோபனைப் போல் இரக்கம் கொள்ளாமல் இருக்கும்) கொடியவனும் கடியவனும் ஆன திருமகள் நாதன் என்னும் காளையின் (கார் ஏறின்) குளம்புகளால் மிதிபட்டு நார் நாராகக் கிழிபட்டு திரும்பிப் படுக்கவும் இயலாமல் கிடக்கிறேன் நான். தோழியர்களே. அவன் எங்காவது போகும் போது அவன் மிதித்த காலடி மண் தான் கொணர்ந்து வந்து பூசுங்கள். அப்படியாகிலும் என் உடம்பை விட்டு உயிர் போகாமல் இருக்கும்.

English Translation

The self-willed Lord Tirumal was born in a lawless world, as the undisciplined unscrupulous lad of Nandagopala. Brutally kicking me over my injuries he has crippled me. Plaster me with the mud trodden by the rascal and save me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்