விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேயர் தங்கள் குலத்துதித்த*  விட்டுசித்தன் மனத்தே* 
    கோயில்கொண்ட கோவலனைக்*  கொழுங்குளிர் முகில்வண்ணனை* 
    ஆயரேற்றை அமரர்கோவை*  அந்தணர்தம் அமுதத்தினை* 
    சாயைபோலப் பாடவல்லார்*  தாமும் அணுக்கர்களே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேயர் தங்கள் - வேயர்களுடைய
குலத்து - வம்சத்து
உதித்த - அவதரித்த
விட்டு சித்தன் - பெரியாழ்வாருடைய
மனத்து - ஹ்ருதயத்தில்

விளக்க உரை

இப்பாட்டால், இத்திருமொழி கற்பவர்களுக்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார். விஷ்ணுசித்தர் என்கிற ஆழ்வார் திருநாமத்திற்கு வ்யுதபத்தி இப்பாடல் விசுதமாகும். ‘விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றுள்ளவர்’ என்ற அத்திருநாமத்தின்பொருள் ஒன்றரையடிகளால் விரிக்கப்பட்டது. (வேயர் இத்தியாதி) பெரியாழ்வாருடைய திருவம்சத்திற்கு வேயர்குலமென்று திருநாம மென்பர்; “முன்னை வினையகல மூங்கிற்குடியமுதன் என்று- இராமாநுச நூற்றந்தாதி அருளிச்செய்த திருவரங்கமுதனார் மூங்கிற்குடியர் என்றதுபோல, இவர் வேயர்குடியர் என்கிறது. எம்பெருõமன் இடைக்குலத்திற் பிறந்து அனைவர்க்கும் எளியனானதுபோல ஆழ்வார் தமக்கும் எளியனானபடியைக் கோவலனை யென்பது குறிக்குமென்க. எம்பெருமான் ஆழ்வார்நெஞ்சிற் புகுந்தபின்பு, விலக்ஷணமானதொரு புகரைப்பெற்றன னென்பதைப் பெறுவிக்கும், “கொழுங்குளிர் முகில்வண்ணனை” என்பது. கொழுமை- செழுமை. எம்பெருமானுடைய ஔதார்யத்திற்கு முகிலையவமை கூறினானென்றுங் கொள்வர். ஆயரேறு- இடைக்குலத்திற் பிறக்கப்பெற்றோமென்னும் மகிழ்ச்சியினால் காளைபோலச் செருக்குற்றிருப்பவன். ஆழ்வார் திருவுள்ளததிற் புகழ்பெற்ற மகிழ்ச்சியினாலும் அங்ஙனமே செருக்குற்றானென்க. அந்தணர்- ஆசிரியர்; நச்சினார்க்கினியர் “அந்தத்தை அணவுபவர்” (வேதாந்தத்தைச் சார்பவர்) என விரித்துக் காரணப்பொருளுரைத்தனர்; “அணவுபவர்” என்றது அணர் என விகாரப்பட்டது. “ஆரணத்தின் சிரமீதுறை” என்ற சடகோரந்தாதிச் சிறப்பாயிரச் செய்யுளின் ஈற்றடியில் “கார் அணனைக் கம்பனை நினைவாம்” என்றவிடம் நோக்கத்தக்கது. அந்தம் + அணர், அந்தணர்; தொகுத்தல். இனி, ‘அம் தம் ஆர்’ னஎப் பிரித்துப்பலவாறகப் பொருள்கௌள்வாரு முளர். “அந்தனரென்போ ரறவோர் மற்றெப்பொருட்ருஞ், செந்தண்மை பூண்டொழுகலான்” என்ற திருவள்ளுவர் திருக்குறளும்,அவ்விடத்துப் பரிமேழைகருரையும் நோக்கத்தக்கது. “நூலே காகம் மூக்கோல்மனையே, ஆயுதங்காலை அந்தணர்க்குரிய” என்ற தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தில் கருத்தை நோக்கினால், அந்தணரென்ற சொல் யதிகளைக் குறிக்குமென்பது தெற்றென விளங்கும்.

English Translation

Gopala, the dark cloud-hued Lord, the cowherd-chief, the king of celestials, has his temple in the Jeeva of Vishnuchitta, scion of the Veyar clan. These songs in his praise are like Amrutam for the learned. Those who can sing it will become inseparable from eh Lord, like his shadow.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்