விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து*  அவர்க்குஉயவே-
    பண்ணும் பரனும் பரிவிலனாம்படி*  பல்லுயிர்க்கும்-
    விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமாநுசன்*
    மண்ணின் தலத்து உதித்து*  உய்மறை நாலும் வளர்த்தனனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உயிர்களுக்கு உள் நின்று - எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமியாயிருந்து கொண்டு;
உற்றனவே செய்து - ஹிதமானவற்றையே நடத்திக்கொண்டு;
அவர்க்கு - அவ்வாத்மாக்களுக்கு;
உயவே பண்ணும் பரனாம் - உஜ்ஜீவநத்தையே பண்ணிக் கொண்டிருக்கிற எம்பெருமானாம்;
பரிவு இலன் ஆம படி - (ஆத்மாக்களிடத்தில் எம்பெருமானாரைப்போல்) ப்ரதியுடையவனால்லன் என்ன வேண்டும் படியாக;

விளக்க உரை

இப்பாட்டின் ஈற்றடியை “மண்ணின் தலத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்றே அத்யாபகர்கள் ஒதுவர்கள். “நேர்பரினாறே” என்ற கட்டளைக் கலித்துறையின் இலக்கணப்படி பதினாறெழுத்து ஒத்திருந்தாலும் தளை தட்டுகிறபடியாலும், மணவாளமாமுனி களுரையில் “ஸர்வோஜ்ஜீவந சாஸத்ரமான” என்கிற ஒரு வாக்கியம் வ்யர்த்தமாகவேண்டி வருகையாலும் இவ்விரண்டு குறைகட்கும் இடமறும்படி “ உய் மறைநாலும்” என்கிற ப்ராசீநபாடம் கொள்ளத்தக்கது: உய் என்பதற்குப் பொருளாகவே மணவாள மாமுனிகள் ஸர்வோஜ்ஜீவந சாஸ்த்ரமான” என்கிற வாக்கியமருளிச் செய்தாரென்க.

English Translation

The Lord resides in all souls, doing good to them and bringing about their emancipation, But even he appears loveless in comparison to Ramanuja who left his abode in Vaikunta and took birth on Earth to spread the four Vedas and free every soul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்