விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும்*  திருவரங்கர் 
    கைத்தலத்து ஆழியும்  சங்கமும் ஏந்தி,*  நங்கண் முகப்பே-
    மொய்த்தலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும்*   நின்புகழே- 
    மொய்த்தலைக்கும் வந்து*  இராமாநுச! என்னை முற்றுநின்றே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செய் தலை - வயல்களில்;
சங்கம் - சங்குகளானவை;
செழு திரு முத்தம் - அழகிய முத்துக்களை;
ஈனாம் திரு அரங்கர் - உண்டாக்கு மிடமான திருவாங்கமா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள்;
கைத்தலத்து - தமது திருக்கையிலே;

விளக்க உரை

எம்பெருமான் தனது விலக்ஷணமான அழகைக் காட்டிக் கொண்டு வந்து என்கண்னெதிரே நின்றாலும், என்னை விடாதே வலியப்பற்றினாலும் அவனது அழகில் நான் மோஹிக்கப் பெறுவதில்லை; தேவரீருடைய திருக்குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன பகவத் குணங்களை நான் ஈடுபடுவதில்லை; தேவருடைய திருக்குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன. பகவத் குணங்களுக்கு நான் ஈடுபடுவதில்லை யென்றாராயிற்று. “செய்த் தலைச்சங்கம் செழுமுத்தமீனாம்” என்கிற விசேஷணம்-திருவரங்கர் என்பதன் பகுதியாகிய திருவரங்கத்தில் அந்வயிக்கும். திருவரங்கம் எப்படிப்பட்டதென்றால், முத்துக்களை யுதிர்க்கும் சங்குகள் நிறைந்த வயல் சூழ்ந்தது என்றவாறு. ஈனாதல்-பிரஸவித்தல்.

English Translation

O Ramanuja! The Lord of Arangam surrounded by watered fields that throw up pearls and conches, wields a conch and discus in his beautiful hands and remains in our eyes forever saying, "I shall never leaves you", Yet your glory enguifs me completely and tosses me like one possessed.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்