விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆரெனக்கு இன்று நிகர் சொல்லில்?*  மாயன் அன்று ஐவர்தெய்வத்-
    தேரினில் செப்பிய கீதையின்*   செம்மைப் பொருள் தெரியப்-
    பாரினில் சொன்ன இராமாநுசனை பணியும் நல்லோர்*
    சீரினில் சென்று பணிந்தது,*  என் ஆவியும் சிந்தையுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயன் - ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய எம்பெருமான்;
அன்று - முற்காலத்தில்;
ஐயர் - பஞ்சபாண்டவர்களுடைய;
தெய்வம் தேரினில் - தெய்வத்தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்துகொண்டு);
செப்பிய - அருளிச் செய்த;

விளக்க உரை

இந்த உயிர்களின் காரணமாக உள்ள கண்ணன் – பூதனை, சகடாசுரன் போன்ற அசுரர்களை வதைத்தும்; பசுக்கள் மற்றும் கோபர்களை ஆதரித்தும்; கோவர்த்தனம் எடுத்து அவர்களைக் காத்தும்; யசோதை, அக்ரூரர், அர்ஜுனன் போன்றவர்களுக்குத் தனது விச்வரூபத்தைக் காண்பித்தும் – இவ்விதமாக பல வியப்பளிக்கும் செயல்களை புரிந்த மாயன் ஆவான். அவன் மஹாபாரத யுத்தத்தின்போது, பஞ்சபாண்டவர்களுக்கு வெற்றியை அளிப்பதற்காக, தனது (கண்ணன்) திருவடிகள் பட்ட புனிதமான தேரில் அமர்ந்து, மோக்ஷ உபாயமான ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசம் செய்தான். இப்படிப்பட்ட கீதையின் உண்மையான ஆழ்பொருளை, மற்றவர்கள் போன்று தனது விருப்பப்படி பொருள் கூறாமல், உபனிஷத்துக்கள் மூலமாக ஆராய்ந்து, கீதாபாஷ்யம் மூலமாக, இந்த உலகிற்கு நன்கு விளங்கும்படி செய்தவர் உடையவர் ஆவார். அவருடைய திருவடிகளில் – ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே – என்று பணிந்தவர்கள் கூரத்தாழ்வான் போன்றவர்கள் ஆவர். இவர்களது உயர்ந்த திருக்கல்யாண குணங்களில் சென்று எனது மனமும் ஆத்மாவும் படிந்துவிட்டது. இனி இந்த உலகில் எனக்கு நிகரானவர்கள் யார் உள்ளனர்?

English Translation

Then in the yore the wonder Lord spake the Gita driving the chariot for Arjuna in the battle of the five against the hundred. Our master Ramanuja expounded its meaning to the world, with a lucid commentary. My heart and soul forever bathe in the goodness of his devotees. Come to say, who is my peer?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்