விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மண்மிசை யோனிகள்  தோறும் பிறந்து*  எங்கள் மாதவனே- 
    கண்ணுற நிற்கிலும் காணகில்லா,*  உலகோர்கள் எல்லாம்-
    அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே* 
    நண்ணரு  ஞானம் தலைக்கொண்டு,*  நாரணற்கு ஆயினரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எங்கள் மாதவனே - நமக்குநாதனான திருமால் தானே;
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து - (இப்பூமியிலுள்ள மநுஷ்யாதி) யோனிகள் தோறும் அவதரித்து;
அண்ணல் இராமாநுசன வந்து தோன்றிய அப்பொழுதே - ஸர்வஸ்வாமியான எம்பெருமானார் இங்கே வந்தவதரித்தவுடனே;
நண்ண அரு ஞானம் தலைக் கொண்டு - பெறுதற்கரிதான ஞானம் அதிகரிக்கப் பெற்று;
நாரணற்கு ஆயினர் - ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப்பட்டனர்;

விளக்க உரை

உரை:1

எம்பெருமானுடைய அவதாரத்திற்காட்டிலும் எம்பெருமானாருடைய அவதாராமே சிறப்புற்ற தென்கிறார். எம்பெருமான் பலபலயோனிகளிற் பலவகைப்பிறவி பிறந்து கண்காண வந்துநின்று உபதேசங்களாலே ஸ்வஸ்வரூபத்தைக் காட்டிக்கொடுத்த விடத்திலும் யாரும் அவனை லக்ஷியம் பண்ணவில்லை; “அவஜாநந்தி மாம் மூடா:” (என்னை மூடர்கள் அவமானப்படுத்துகிறார்கள்) என்று அவன்றானே சொல்லிக்கொண்டு வருத்தப்பட வேண்டிற்றாயிற்று ஆகையாலே பகவானுடைய அவதாரம் ஸம்ஸாரிகளுடைய தெள்ளறிவுக்கு உறுப்பாகவில்லை. எம்பெருமானாருடை அவதாரமோ வென்னில்; பயன்பெற்றது. இவர் தாம் திருவவதரித்தவடனே எல்லாவுலகத்தாரும் ஆச்சரியமான ஞானத்தைப்பெற்று உஜ்ஜீவித்தார்கள் - என்றாராயிற்று.

உரை:2

மாறிமாறிப் பல பிறவிகள் எடுக்கும் மனிதர்கள் போன்று மனிதன், விலங்கு என்ற பல ரூபங்களில் இராமனாகவும், கண்ணனாகவும் எம்பெருமான் அவதரித்தான். “அகலகில்லேன் இறையும்” எனத் தன்னைவிட்டுப் பிரியாத பெரியபிராட்டியுடன்வன் எப்போதும், எங்கும், அனைவரின் கண்களில் புலப்படும்படி நின்றாலும் – இந்த உலக மக்கள் செய்வது என்ன? இவனே நமக்கு ஏற்ற எஜமானன் என்று அறியாமல் உள்ளனர், அறியாமல் இருந்தனர். ஆனால் இந்த உலகைக் காப்பாற்றுவதற்காக, பரமபதத்தில் இருந்து, நம் மீது கொண்ட கருணை காரணமாக, இந்தப் பூமியில் எம்பெருமானார் திருஅவதாரம் செய்தார். இதனால் நிகழ்ந்தது என்ன? இந்த உலகில் உள்ள மக்கள் பலரும், தங்களில் இயல்பான ஞானம் பெற்று, அனைவருக்கும் பந்துவாக உள்ளவனும், அனைவரின் அந்தர்யாமியாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீமந் நாராயணனுக்கு அடிமைகள் ஆனார்கள்.

English Translation

Even when the lord Madhava himself enters into every womb, takes birth and stands before our eyes, we are unable to see him, Whereas, by the singel Avatara of Ramanuja on Earth, all beings have access to the subtle knowledge to take them to the feet of Narayana.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்