விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்று கொல்? தோழிமீர்காள்*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பொன்திகழ் புன்னை மகிழ்*  புது மாதவி மீது அணவி* 
    தென்றல் மணம் கமழும்*  திருவல்லவாழ் நகருள்- 
    நின்ற பிரான்*  அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீர் எம்மை தலிந்து  - நீங்கள் எம்மை வருத்தப்படுத்தி
என் செய்தீர் - என்ன காரியம் செய்தீர்கள்!
தென்றல்-  தென்றல் காற்றானது
பொன் திகழ் புள்ளை - பொன்போல் விளங்குகிற தாதுகளையுடைய புன்னை மரங்களென்ன
மகிழ் - மகிழமரங்களென்ன

விளக்க உரை

(என்று கொல். தோழிகாள்! என்ப்ரக்ருதியை அறிந்திருக்கிற நீங்கள் எனக்கு ப்ரியமானவற்றைச் சொல்லி என்னைத் தேற்ற வேண்டியது ப்ராப்தமாயிருக்க, என்னைக் கண்டிப்பதிலே ஒருப்பட்டிருப்பதனால் உங்கட்கு என்ன பயனுண்டாகும். உங்கள் வழியிலே நான் மீளப்போகிறேனென்று எண்ணமோ; அது ஒருநாளுமில்லை.திருவல்லவாழ்நகர் சோலைகளிலிருந்து வீசுகின்ற நறுமணம் மிக்க தென்றலானது என்னை அவ்வழியே இழுக்க நான் உங்கள் வழியே வருவதற்கு ப்ரஸந்தியுண்டோ; அத்தலத்துப் பெருமானுடைய பாதாரவிந்த ரேணுவைச் சிரமீது அணியப்பெறவேணுமென்றன்றோ எனக்கு ஆவலிருப்பது; அது பற்றி ஏதேனும் சொல்லவல்லிகோலாகில்- சொல்லுங்கோள்; வீணாக என்னை நலிவது வேண்டா என்றாளாயிற்று.

English Translation

O Sakhis, why do you torment me thus? The Lord stands Tiruvallaval where the soft breeze wafts the fragrance of fresh golden Punnai, Magil and Madavi flowers. Alas! when will be carry the dust of his feet on our heads?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்