விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புறம் அறக் கட்டிக்கொண்டு*  இரு வல்வினையார் குமைக்கும்,* 
    முறை முறை யாக்கை புகல்ஒழியக்*  கண்டு கொண்டொழிந்தேன்,*
    நிறம் உடை நால்தடம்தோள்*  செய்யவாய் செய்ய தாமரைக்கண்,* 
    அறம்முயல் ஆழிஅங்கைக்*  கருமேனி அம்மான் தன்னையே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரு - புண்யபாபங்களென்று இருவகைப்பட்ட
வல் விளையர் - பிரபல கருமங்கள்
புறம் அற - புச்சம் தோன்றாதபடி
முறை முறை - தோல் மாறுங் கணக்கிலே
புகல் ஒழிய -புகுவது தவிரும்படியாக

விளக்க உரை

(புறமறக் கட்டிக்கொண்டு.) கீழ்ப்பாட்டில் ப்ரக்ருதிஸம்பந்தத்தை நினைத்து வருத்தமுற்ற ஆழ்வாருடைய இழவு ஒருவாறு தீரும்படி எம்பெருமான் தன வடிவழகைக் காட்டியருள, அதை ஸேவித்தவாறே தம் உடம்பை மறந்து மகிழ்ந்து போகிறார். இவரை மெய்மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு. *நிலமுடை கால்தடந்தோள் செய்யவாய் செய்யதாமரைக்கண் அறமுயலாழியங்கை கருமேனியம்மான் தன்னையே கண்டுகொண்டொழிந்தேன். * என்று பெருங்களிச்சியாகக் கூறுகின்றார். முடிபோட்ட விடத்தையறிந்து அவிழ்த்துக் கொள்ள முடியாதபடி புச்சத்தோற்றாமே உள் முடியாக முடித்து வைக்கப்பட்ட இரண்டு மஹாநுபாவர்கள் உண்டே; புண்யம் பாபம் எனப்படுமவர்கள்; அந்த முதலியார்கள் பீடிப்பதற்கிடமான சரீரங்களிலோ, திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் ஜந்துபோலே புகுதல் தவிரும்படியாகக் கருமேனியம்மான் தன்னைக் கண்டு கொண்டேனென்கை. முந்துறமுன்னம் எம்பெருமான் ஆழ்வாரைத் தோள்களாலே அணைக்க வந்ததுபற்றி ‘நிமுடை கால் தடந்தோள்’ என்கிறார். உடனே சில அமுத மொழிகளைப்பேசத் தொடங்கினனாதலால் செய்யவாய் என்றார். உடனே குளிரக்கடாக்ஷிக்கையாலே செய்ய தாமரைக்கண் என்றார். *இன்னரென்றறியேன் அன்னேயாழியொடும்பொன்னார் சாரிங்கமுடையவடிகளை இன்னாரென்றறியேன்* என்று மதிமயக்கவல்ல திருவாழி திருச்சங்குகளைக் காட்டியருளித் திருமேனியையும் முற்றூட்டாகக் காட்டினைபற்றி ‘அறமுயவாழியக்கைச் சருமேனியம்மான்றன்னையே’ என்றார்.

English Translation

O Dark-hued Lord, you have embraced me all over! My strong karmas of repeated miserable births have ceased. I have seen to my satisfaction your four radiant arms. Your red lips and lotus eyes, and the discus of cause-effect in your hands.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்