விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து*  அன்று உடனே விழுங்கி,* 
    கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது*  கண்டும் தெளியகில்லீர்,* 
    சிரங்களால் அமரர் வணங்கும்*  திருக்குருகூர் அதனுள்,* 
    பரன் திறம் அன்றி பல் உலகீர்!*  தெய்வம் மற்று இல்லை பேசுமினே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரந்த - விஸ்தீர்ணமான
தெய்வமும் - தேவதாவர்க்கங்களையும்
பல் உலகம் - (அவர்களுக்குப்) பல உலகங்களையும்
படைத்து - ஸ்ருஷ்டித்தும்
அன்று - பிரளயம் வந்த காலத்திலே எல்லாவற்றையும் ஒரு சேர விழுங்கி

விளக்க உரை

உலகங்களை ரகூஷித்தருள்வதற்காக எம்பெருமான் செய்து போரும் செயல்களை ஆராய்ந்து பார்த்தாலும் இவனே பரம புருஷனென்று அறியப்போது மென்கிறார். தேவ வர்க்கம் முதற்கொண்டு பூவுலகங்களையும் படைத்ததும் மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் உண்ணா பெருவெள்ள முண்ணுமல் தான்விழுங்கி உய்யக் கொண்டதும், பிறகு வெளிநாடுகாணப்புறப்படவிட்டதும், வாமனுவதாரம் பண்ணி மூவடி நீரேற்றுப்பெற்று அளந்து கொண்டதும், மஹாவராஹமாய் அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொண்டதுமாகிய இத்தகைய செயல்களைக் கொண்டே இவனே பர தேவதை என்று திண்ணமாக எண்ணலாயிருக்க, அந்தோ! தெளிவுபெற மாட்டிற்றிலீரே என்கிறர்முன்னடிகளில். எந்த தெய்வங்களை நீங்கள் சென்று பணிகின்றீர்களோ அந்த தெய்வங்களும் வந்து தலையாலே வணங்கும் திருக்குருகூரில் பரத்வம் பொலிய நிற்கும் பெருமானுக்குச் சரீரமல்லாத தெய்வம் ஒன்றுண்டோ? *** என்னும்படியாக வன்றே ஸகல தெய்வங்களுமிருக்கின்றன. ஸ்ரீமந் நாராயணனைப்போலே ஸ்வதந்த்ரமான தெய்வம் ஒன்றுண்டாகில் எடுத்துப் பேசுங்களென்களென்கிறார்.

English Translation

He made all the gods and all the worlds, then in a trice swallowed all; then hid, issued, traversed, and shifted all. O Meni of the world! Now speak! Knowing this, do you still not understand? Other than his form in kurugur, worshipped by the gods, there is no Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்