விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிறையினால் குறைவு இல்லா*  நெடும் பணைத் தோள் மடப் பின்னை,* 
    பொறையினால் முலை அணைவான்*  பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த,* 
    கறையினார் துவர் உடுக்கை*  கடை ஆவின் கழி கோல் கைச்,* 
    சறையினார் கவராத*  தளிர் நிறத்தால் குறைவு இலமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிறைவினால் குறைவு இல்லா - குறையற்ற ஸ்த்ரீத்வ பூர்த்தியையடையவளும்
நெடு பணை தோள் -நீண்டு பணைத்ததோள்களையுடையவனும்
மடம் - அறிந்தும் அறியாமையாகிற மடப்பம் பொருந்தியவளுமான
பின்னை - நப்பின்னையினுடைய
முலை அணைவான்- திருமுலைத்தடத்தோடு சேருகைக்காக

விளக்க உரை

(நிறைவினால்.) நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக எருதேழடர்த்த பெருமான் விரும்பாத செவ்வியநிறம் எனக்கு ஏதுக்கென்கிறாள். கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்ஸமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருமவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கன்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸூராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் எழுதிருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அவளை மணஞ்செய்து கொண்டானென்றவரலாறு முன்னடிகட்கு அறியத்தக்கது. பொறையினால்=நப்பின்னையை எப்படியாவது பெற்றுவிட வேணுமென்கிற ஆசையினால், பொறுக்கவொண்ணாத வ்யஸநங்களையும் பொறுத்துக்கொண்டமை தெரிவித்தவாறு. “எருதுகளின் கொம்பாலும் குளம்பாலும் நெருக்குண்டவித்தை அவள் முலையாலே பிறந்த விமர்த்தமாக நினைத்திருந்தான்” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தியின் அழகு காண்க

English Translation

The Lord wears a pearl necklace, and robes dyed red. He carries a milk-pail and a grazing staff. He deftly subdued seven fierce bulls for the joy of embracing the breasts of comely Nappinnai with bamboo-slim arms, if he does not desire my pink cheeks, we have nothing lose

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்