விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும்*  புலவீர்காள்,* 
    மன்னா மனிசரைப் பாடிப்*  படைக்கும் பெரும் பொருள்?,*
    மின் ஆர் மணிமுடி*  விண்ணவர் தாதையைப் பாடினால்,* 
    தன்னாகவே கொண்டு*  சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாடி - கவிபாடி
படைக்கும் - (அதனால்) நீங்களடைகின்ற
பெரும்பொருள் - பெருஞ்செல்வம்
என் ஆவது - யாதாவது?
எத்தனை நாளைக்கு போதும் - (அது) எத்தனை நாளைக்குப் பற்றும்?
வின் ஆர்- ஒளிநிறைந்த
 

விளக்க உரை

கவிபாடினார்க்கு ஸகலவரிசைகளும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் என்னும்படியான அஸ்திரங்களைக் கவிபாடுவதில் என்ன பயனுண்டென்கிறார். என்னாவது- அற்பர்களைக் குறித்து நீங்கள் கவிபாடுவதனால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுமா? கவிபாடுவாரும் பாடினவர்களுக்குக் கொடுப்பாருமாய்க் காணவில்லையோ? என்றார்கள்; அதற்கு மேல் எத்தனை நானைக்குப்போதும்? என்கிறார். கவிபாடப் பரீச்ரமப்பட்ட நாள்களோ பலப்பல இருக்கும்; அந்நாட்களுள் ஒரு நாளைய ஜீவனத்திற்குக் காணுமோ அவன் கொடுக்கும் பொருள் என்றபடி. அந்த அற்ப பலனுக்கும் அவகாசமில்லையாம்படி அல்பாயுஸ்ஸுக்களாகவன்றோ அவர்கள் தாமிருப்பது என்கிறார் மன்னா மனிசரை என்பதனால் ஒருவன் விஷயமாக ஒரு வருஷ காலம் வெகு பரிச்ரமப்பட்டு ஒரு புத்தகமெழுதி முடித்து அதை அவனிடம் கொண்டு போய்ப் படித்துக் காட்டிப் பரிசு பெற வேணுமென்றெண்ணிப் புறப்படும்போதே ‘அவன் மாண்டான்’ என்று எதிரே ஆள்வரும்படியாகவன்றோ இருப்பது. ‘பாண்டேன் வண்டறையும் குழலார்கள் பல்லாண்டிசைப்ப, ஆண்டார் வையமெல்லாமரசாகி முன்னாண்டவரே மாண்டார் என்று வந்தாரந்தோ!’ என்ற பெரிய திருமொழிப்பாசுரம் இங்கு நினைக்கத் தகும்.

English Translation

O Poets who sing the glories of ephemeral man! How much do you get, and how long does it last? Praise the Lord of radiant crown. Making you his own, he will provide you for all times.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்