விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணித் தண் அம் துழாய் முடிக்*  கமலத் தடம் பெருங் கண்ணனைப்,*  புகழ் 
    நண்ணி தென் குருகூர்ச்*  சடகோபன் மாறன் சொன்ன,* 
    எண்ணில் சோர்வு இல் அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,* 
    பண்ணில் பாட வல்லார்*  அவர் கேசவன் தமரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தண் அம்துழாய் கண்ணிமுடி - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையணிந்த முடியையும்
கமலம் தடம் பெரு கண்ணனை - தாமரை போன்று விசாலமான நீண்ட திருக்கண்களையுடைய பெருமானுடைய
புகழ் நண்ணி - திருக்குணங்களை அநுபவித்து
தென் குருகூர் - சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் - அநுஸந்தானத்தில் சோர்வு இல்லாத

விளக்க உரை

இப்பதிகத்தை இனிதாக அநுஸந்திக்குமவர்கள், பாகவதர் என்ற போக்கு உரியவராவர் என்று, இது கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். தம்மோடே கலக்கையாலே எம்பெருமானுக்குப் பிறந்த செவ்வியைச் சொல்லுகிறது முதலடி. புகழ் நண்ணி-புகழ் என்பது திருக்கல்யாண குணங்களெல்லாவற்றிற்கும் பொதுச் சொல்லாயினும், தம்பக்கலில் அவன் பண்ணின வ்யாமோஹ குணத்தை இங்குக் குறிக்கின்றதென்னலாம்.

English Translation

This decad of the thoughtful thousand songs by Southern city kurugur's Maran satakopan, is for the Lord of lotus eyes, Krishna who wears a fragrant Tulasi wreath. Those who can sing it will be devotees of kesava.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்