விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன் நரசிங்கமது ஆகி*  அவுணன்- முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்- 
    மன்னர் அஞ்சும்*  மதுசூதனன் வாயிற்*  குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க* 
    நன் நரம்பு உடைய தும்புருவோடு*  நாரதனும் தம் தம் வீணை மறந்து* 
    கின்னர மிதுனங்களும் தம் தம்*  கின்னரம் தொடுகிலோம் என்றனரே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நரசிங்கம் அது ஆகி - நரஸிம்ஹரூபங்கொண்டு;
அவுணன் - ஹிரண்யாஸுரனுடைய;
முக்கியத்தை - மேன்மையை;
முடிப்பான் - முடித்தவனும்;
மூஉலகில் மன்னர் - மூன்றுலோகத்திலுமுள்ள அரசர்கள்;

விளக்க உரை

வீணை வித்தையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தும்புரு நாரதர்கள் கண்ணனது குழலோசையைக்கேட்ட பிறகு, அது தன்னிலே ஈடுபட்டுத் தமது வீணைகளை மறந்தொழிந்தனர்; கிந்நரமிதுநங்கள் என்று புகழ் பெற்றிருக்கும் பேர்களும் இக்குழலோசையைக்கேட்டுத் தோற்றதாகக்கொண்டு, “இனி நாங்கள் எங்கள் கின்னரந் தொடுவதில்லை, எங்களப்பனாணை”” என்று உறுதியாக உரைத்தொழிந்தனர் என்க. முன்பொருகால் பிரஹ்லா தாழ்வானுக்காக நரசிங்க வுருவாய்த் தூணில் தோன்றி ஹிரண்யனுரத்தாய்க் கிழித்த வரலாறு கீழ் விரிக்கப்பட்டது. முன் முடித்தான் என இறந்த காலமாகக் கூறவேண்டியிருக்க, எதிர்காலமாகக் கூறியுள்ளது-இயல்பினாலாகிய காலவழுவமைதி; “விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும், பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி” என்பது நன்னூல், வீணையின் தந்திகலைச் சொல்லக் கடவதான நரம்பு என்ற சொல் இங்கு வீணையைக் குறித்தது இலக்கணையால். ‘கின்னரம் மிதுனங்களும்’ என மகரவிரித்தல், செய்யுளோசை நோக்கியது. “தொடர்கிலோம்” என்றுமோதலாம். இரண்டாமடியில் “மன்னரஞ்ச” என்ற பாடல் மிக வழங்கும்.

English Translation

Long ago the Lord Madhusudana, who was feared by the haughty kings of the three worlds, came as Narasimha, and destroyed Hiranya Kasipu. On hearing the sound of the flute on his lips, the celestial Tumburu, player of the fretted string, and the bard Narada, who sings with unfretted strings, forgot their respective instruments; the twin Kinnaras resolved never to touch their Kinnaris again.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்