விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மான்நோக்கின்*
    அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,*
    மன்னும் மடலுரார்' என்பதோர் வாசகமும்,*
    தென்னுரையில் கேட்டறிவதுண்டு,*  -அதனையாம்தெளியோம்;-  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மான் நோக்கின் அன்னம் நடையார் - ‘மான் போன்ற நோக்கையும் அன்னம் போன்ற நடையையுமுடைய மாதர்கள்
அவர் ஏச - (உலகத்தார்) பழிதூற்றும் படி
ஆடவர் மேல் - புருஷர்களின் மேலே (ஆண்களை நோக்கி)
மன்னும் மடல் ஊரார் என்பது ஒர் வாசகமும் - மடலூரக் கூடாது“ என்று சொல்லுகிற ஒரு வாக்கியத்தை

விளக்க உரை

சிறந்த காம புருஷார்த்தத்தையே நாம் கடைப்பிடிப்போம் என்றார் கீழ். தாம்பற்றின பகவத் காமம் தமக்குக் கைகூடாமையாலே அதற்காக மடலூர்வதே கதி என்பதைத் திருவுள்ளத்தில் அறுதியிட்டு, “புருஷனை நோக்கி ஸ்த்ரீகள் மடலூர்வது கூடாது“ என்று தமிழர் ஒரு வரம்பு கட்டிவைத்திருக்க, ஸ்த்ரீயாகிய நீர் எங்ஙனே மடலூரப்புகுவீர்? என்று சிலர் ஆக்ஷேபித்ததாகக் கொண்டு அவ்வாக்ஷேபத்தை அநுவதித்து அதற்கு ஸமாதாநமும் அருளிச்செய்கிறார். மடலூர்வதென்பது நாணத்தை அறவே யொழித்துக் காதலை வெளிப்படையாக்கித் தெருவேற்ப்புறப்பட்டுச் செய்யுங் காரியமாதலால், நாணத்தையே ஸர்வஸ்வமாகக் கொண்ட மாதர்கட்கு இக்காரியம் கூடவே கூடாதென்று தமிழர் மறுத்தனர். அந்த ஸித்தாந்தத்தையே “கடலன்ன காமத்தராயினும் மாதர், மடலூரார் மற்றையார்மேல்“ இத்யாதிகளால் பின்புள்ளார் வெளியிட்டனர்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்