விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்*  படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்* 
    தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்*  தாமோதரன் தாங்கு தடவரைதான்* 
    அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த*  அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்* 
    குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படங்கள் பலவும் உடை - பல படங்களையுடைய;
பாம்பு அரையன் - ஆதிசேஷன்;
படர் பூமியை - பரம்பின பூமியை;
தாங்கி கிடப்பவன் போல் - (தன் தலைகளினால்) தாங்கிக் கொண்டிருப்பது போல;
தாமோதரன் - கண்ணபிரான்;

விளக்க உரை

உரை:1
 
கருடனைப் புள்ளரையன் என்றாள் கோதை நாச்சியார். அவர் தம் திருத்தகப்பனார் பெரியாழ்வார் ஆதிசேஷனைப் பாம்பரையன் என்கிறார்.பாம்புகளின் அரசனான ஆதிசேஷன் விரிந்த படங்கள் பலவும் உடையவன். அவன் பூமியைத் தாங்கிக் கிடக்கின்றான். அது போல் நீண்ட அழகிய கைகளின் விரல்கள் ஐந்தும் மலர விரித்து தாமோதரன் தாங்கும் கொற்றக் குடை எது தெரியுமா? இலங்கைக்குச் சென்று அதன் பெருமையை முழுக்க அழித்த அனுமனின் புகழினைப் பாடி தங்கள் குழந்தைகளை தங்களின் கைகளில் ஏந்தி பெண் குரங்குகள் தூங்க வைக்கும் கோவர்த்தனம் என்னும் குன்றமே.மந்திகள் மட்டுமின்றி மாநிலத்தில் உதித்தவர் எல்லோரும் அனுமன் புகழ் பாடி அவன் தன் பெருமைகளை நம் குழந்தைகளுக்கு அனுமனின் திருவவதார நாளான இந்த இனிய நன்னாளில் சொல்லுவோம்.

உரை:2

கண்ணபிரான் ஐந்து விரல்களாலும் மலையைத் தாங்கிக்கொண்டு நின்றது - ஆதிசேஷன் தனது ஆயிரந்தலைகளினால் பூமியைத் தாங்கிக்கொண்டு கிடப்பதை யொக்குமென்றார் - முன்னடிகளால். பலவும் என்றவிடத்து உம்மை - குறைவில்லாமைப் பொருளைத் தருதலால், முற்றும்மை; இசை நிறையென்னவுமாம். அரையன் - அரசன்; ‘ராஜா’ என்ற வடசொல்விகாரம். பின்னடிகளின் கருத்து ;- அம்மலையிலுள்ள பெட்டைக் குரங்குகள் பண்டு தம் குலத்திற் பிறந்து பற்பல வீரச்செயல்களைச் செய்த ஹனுமான் இராமபிரானிடத்துப் பெற்ற பரிசுகளைப் பாடிக்கொண்டு தம்குட்டிகளை அகங்கையிற் கொண்டு சீராட்டி உறங்கச் செய்யும்படியைக் கூறினபடி. உலகத்திலுங் குழந்தைகளை உறக்க வேண்டுவார் சில கதைகளைச் சொல்லிச் சீராட்டுதல் வழக்கமாயிருப்பதை அறிக. குட்டன் - உவப்பினால் வந்த திணை வழுவமைதி. இதற்கு உள்ளுறை பொருள்; - கபடச்செயல்களுககு ஆசுரமான இந்திரியங்களின் திறலைவென்ற பாகவதர்களின் ஞானானுட்டானங்களைத் தமது கைக்கடங்கின சிஷ்யர்களுக்கு உபதேசித்து இம்முகமாக அவர்களுக்கு அறிவை வளரச் செய்கின்ற மஹாநுபாவர்களின் படியைக் கூறியவாறாம்.

English Translation

Damodara, Sri Krishna, spread his five strong fingers and supported the mount verily like the King of snakes supports the earth on its several hoods. That mount is Govardhana, where female monkeys hold their little ones with their palms and lull them to sleep singing the valour of Hanuman, who completely destroyed Lanka city.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்