விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எழுவதும் மீண்டே*  படுவதும் பட்டு,*  எனை ஊழிகள் போய்க்-
    கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால்,*  இமையோர்கள் குழாம்-
    தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு* 
    கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்,*  உண்டோ கண்கள் துஞ்சுதலே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எழுவதும் - ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும் - மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு - இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள் - எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும் - சென்று கழிவதையும்

விளக்க உரை

பகவத் ஸ்வரூபத்தை முழுவதும் ஸாக்ஷாத்கரிக்க விரும்பித் தொடங்கினார்க்குக் காலம் முடிந்துபோவதேயன்றி அவ்வநுபவம் முடிந்து கண்வாங்குந் தன்மையில்லையென்று ஆழ்வார் அன்பர்க்கு அருளிச் செய்கிறார். ஸூர்யன் உதிப்பதும் மீண்டும் அஸ்தமிப்பதுமாய் இப்படியே நாள் திங்கள் நோக்கி இரங்குதலே யன்றி நித்யஸூரிகள் எப்பொழுதும் கைகூப்பிக்கொண்டு கைங்கர்யம் பண்ம் பொருட்டு சூழப்பெற்ற அநாதியான எம்பெருமானைக் கண்களிப்பக்கண்டு முடிக்க வேணுமென்பதோர் ஒப்பற்ற அன்பைக் கொண்டு நிற்பவர்களுக்கு அவன் பக்கல் வைத்தகண் வாங்கி இமைக்க இடமுண்டோவென்கிறார். இப்பாட்டுக்கு மற்றொருபடியாகவும் பொருளுரைப்பா; எழுவதும்- பிறப்பதும், மீண்டேபடுவதும்- பிறந்தவளவிலே இறப்பதும், பட்டு- பிறந்து, எனை ஊகளள் போய்க்கழிவதும்- பலகாலம் கழித்து இறப்பதுமான உலகத்துப் பொருள்களை, கண்டு கண்டு- பாரத்துப் பார்த்து என்கல் அல்லால்- அவற்றை இகழ்வதல்லாமல்... எம்பெருமானைச் சேவித்துக் காலங்கழியும்படியானதோர் ஆசையில் நின்றார்க்கு அவனை உபேக்ஷிக்கக் காரணமில்லை- என்று. எம்பெருமானைப் பூர்ணாநுபவஞ் செய்யக் கருதி ஆழ்ந்தவர்கட்கு ஞானம் குவியாது என்பதும் தோன்றும்.

English Translation

The hordes of gods worship and circum-ambulate the ancient lord, and spend their hours beholding him with love-filled eyes. Yet every time their eyes blink, they suffer the same pangs as those going through repeated birth-death cycles through eternity.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்