விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திண் ஆர் வெண்சங்கு உடையாய்!*  திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்*  முன்- 
    பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்*  பல்லாண்டு கூறுவித்தேன்*
    கண்ணாலம் செய்யக்*  கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன்* 
    கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்*  கோலம் செய்து இங்கே இரு*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திண் ஆர் - திண்மைபொருந்திய;
வெண் சங்கு - வெண்சங்கத்தை;
உடையாய் - (திருக்கையில்) ஏந்தியுள்ளவனே;
கண்ணா - கண்ணபிரானே;
திருநாள் - (நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய;

விளக்க உரை

திண்ஆர் - சத்ருநிரஸநத்தில் நிலைபேராமல் நின்று முழங்கும் திண்மையைச் சொல்லுகிறது. யசோதைப்பிராட்டி கண்ணனைநோக்கி இப்பாசுரஞ் சொல்லியது. விசாகாநக்ஷத்திரத்தினன்று என்றுணர்க. பண் - இசைப்பாட்டு. இற்றைக்கு ஏழாவது நாளாகிய உன் ஜந்மநக்ஷத்திரத்தில் உனக்கு விசேஷமான மங்களகாரியங்களைச் செய்வதற்காக மங்கலப் பாட்டுக்களையும் பாடுவித்தேன்; அன்றைக்கு வேண்டிய வஸ்துக்களையும் இப்போதே ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன்; ஆகையால் இனி நீ சாதித்தொழிலைத் தவிர்ந்து உத்ஸவிக்ரஹம் போல் உன்னை அலங்கரித்துக்கொண்டு இவ்விடத்திலேயே வீற்றிரு என்று யசோதைப்பிராட்டி வேண்டுகின்றாள். முளையட்டுதல் - கல்யாணாங்கமாக நவதானியங்களைக் கொண்டு பாலிகை வைக்கை. கண்ணாலம் - மரூஉமொழி.

English Translation

O Lord wielding the strong white conch! Seven days hence it is Sravanam, your birthday. As a prelude to the celebrations I let the seeds germinate, and called in the beautiful singing-girls to come and sing “Many happy returns”. I have filled the vessels with rice and vegetables. O Krishna, dear-as-my-eyes, from tomorrow do not go after the calves. Stay here, decked for the occasion.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்